OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 6 நவம்பர், 2014

தேசியக் கொடியும் தேசப்பற்றும்

தேசியக் கொடியும் தேசப்பற்றும் காஷ்மீர் மானிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்ற நச்சுக் கருத்தை விதைப்பது தான் இவர்களின் நோக்கம். தேசப்பற்று என்றால் என்ன? என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. தேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்படும் என்பதை இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். தேசத்தின் மீது பற்று இருந்த காரணத்தால் தான் பாஜகவின் முன்னோடிகள் வெள்ளையர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கு எதிராக உயிரைக் கொடுத்து முஸ்லிம்கள் போராடினார்கள். தங்களுக்கு என தனி நாடு உருவான போதும் தங்கள் நாட்டை விட்டு போகாமல் இங்கேயே தங்கி தேசப்பற்றைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே. மற்ற எந்தச் சமுதாயத்துக்கும் இந்தப் பரீட்சை வைக்கப்படவில்லை. ஆனாலும் ஆங்கிலேயனுக்கு வால் பிடித்த பரம்பரையில் வந்தவர்கள் இன்று தேசப்பற்றின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களாக வேடம் போட்டு தேசியக் கொடியை ஏற்றப் புறப்பட்டிருப்பது கேவலத்திலும் கேவலமாகும். காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தான் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சங்பரிவாரக் கும்பலால் திரித்துக் கூறப்படுகிறது. காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதும், ஏற்றுவோம் எனக் கூறுவதும் தான் அரசியல் சட்டப்படி தேச விரோதச் செயலாகும்.. முதலில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாறு என்ன? என்பதை விளங்கிக் கொண்டால் பாஜகவினர் செய்யும் இந்தச் செயல் எப்படி தேச விரோத நடவடிக்கையாக உள்ளது என்பது விளங்கும். இந்தியா எனும் தேசத்தை ஒருவன் மதிக்கிறான் என்றால் நமக்காக நாமே உருவாக்கிக் கொண்ட சட்டத்தை அவன் மதிக்க வேண்டும். சட்டத்தில் சொல்லப்பட்டதை எதிர்த்து ஒருவன் செயல்பட்டால் அவன் தான் தேச விரோதியாவான். முதலில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்றை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரமான இரண்டு நாடுகளாக ஆக்கப்பட்டன. ஆனால் காஷ்மீர் மாநிலத்தை வெள்ளையர்கள் இந்தியாவுடனும் சேர்க்கவில்லை. பாகிஸ்தானுடனும் சேர்க்கவில்லை. அதைத் தனி நாடாகவே விட்டுச் சென்றனர். இந்து மன்னரான ஹரிசிங் என்பவரின் ஆட்சியின் கீழ் அங்கே மன்னராட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தன்னாட்சியுடன் பாகிஸ்தானுடன் இணைய 1947 ல் ஒப்பந்தம் செய்தார். இதன் பின்னர் காஷ்மீர் மன்னரை இந்திய அரசாங்கம் சரிக் கட்டியதால் அவர் இந்தியாவுடன் நிபந்தனையின் அடிப்படையில் இணைய ஒப்புக் கொண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார். இதன் படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும் பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது. எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு பாகிஸ்தானை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விகாரம் 1948 ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம். ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை. ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதி மொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும். காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார். ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார். இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது. பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது. ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது. பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது. ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின் படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை. இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது குறித்து இந்திய அரசியல் சாசனம் பின்வருமாறு கூறுகிறது ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது The Constitution of Jammu and Kashmir Preamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves – ……… IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION. மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி. இது என்ன கூறுகிறது? ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர். சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?. அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள். மேற்கண்ட காஷ்மீர் அரசியல் சாசனத்தில் காஷ்மீரின் தேசியக் கொடி எது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய அரசியல் சாசனமும் ஒப்புக் கொள்கிறது. ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது. 144. Flag of the State: 144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். இப்போது காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் பிரச்சனைக்கு வருவோம். இந்தியாவின் அரசியல் சாசனப்படி காஷ்மீருக்கான இந்திய தேசியக் கொடி மேலே சொல்லப்பட்டது தான். அது தான் காஷ்மீரத்துக்கான இந்திய தேசியக் கொடி என்று இந்திய அரசியல் சாசனம் சொல்லும் போது அதை மீறும் வகையில் அரசியல் சாசனத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு அந்த மாநிலத்திற்கு எது தேசியக் கொடியாக இல்லையோ அதைத் தான் நாங்கள் ஏற்றுவோம் என்று ஒருவர் கூறினால் அவர் இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறுகிறார். இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறும் யாரும் தேச விரோதிகளாகத் தான் இருப்பார்களே தவிர ஒருக்காலும் தேசபக்தர்களாக முடியாது. தேசியக் கொடியை அரசியலாக்கும் கயவர்கள் முஸ்லிம்கள் தேசியக் கொடியை எதிர்க்கிறார்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயல்கிறார்கள். ஆனால் இவர்கள் எது சட்டப்படி காஷ்மீரின் தேசியக் கொடியாக இல்லையோ அதை காஷ்மீரின் தேசியக் கொடி என்று கூறி தேச விரோதச் செயலைச் செய்கிறார்கள். காஷ்மீருக்கு எது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கிறதோ அதை ஏற்க மறுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் தேச விரோதிகளே என்பதை நிரூபிக்கிறார்கள் இது போல் தான் கர்நாடக மாநில ஹூப்லியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்ற முயல்வதும் அதை முஸ்லிம்கள் எதிர்க்கும் போது முஸ்லிம்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் எனச் சித்தரிப்பதும் இவர்களின் வாடிக்கை. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தனி உடமையான இடத்தில் சங்பரிவாரம் அத்து மீறுகிறது என்பது தான் இங்கே பிரச்சனை. தேசியக் கொடி அல்ல. அங்கே தேசியக் கொடி ஏற்றுவதன் மூலம் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது அல்ல என்று நிலை நாட்டப் பார்க்கிறார்கள். இந்த அத்து மீறலுக்கு தேசியக் கொடியைக் கேடயமாக ஆக்கி தேசியக் கொடியின் மரியாததையைக் குலைத்த தேச விரோதிகள் இவர்கள் தான். அத்வானியின் வீடு முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று வழக்கு இருக்கும் போது அத்வானியின் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம்கள் தேசியக் கொடி ஏற்றப் போனால் அது தேசியக் கொடி பிரச்சனை என்று சங்பரிவாரம் எடுத்துக் கொள்ளுமா? அல்லது அத்வானியின் இடத்தை முஸ்லிம்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுமா? இந்தக் காவிக் கும்பல் நாட்டில் அமைதியக் குலைத்து நல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபாண்மை சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பதை மட்டுமே ஒரே கொள்கையாகக் கொண்டுள்ளது. இவர்களின் எண்ணம் பலிக்காத வகையில் இதை முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் கொண்டு சென்று இவர்களின் தேச விரோதச் செயலை முறியடிக்க வேண்டும். இதற்காக உழைக்க வேண்டிய அளவுக்கு முஸ்லிம்கள் உழைக்க வேண்டும் 370 வது பிரிவு கூறுவது என்ன 370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும் (அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம் (ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம் (1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும் (2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். (இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும். (ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம். ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. (2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். (3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம். எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்

திங்கள், 13 அக்டோபர், 2014

இஸ்லாமும் தீவிரவாதமும்

எனது மாற்று மத சகோதரர்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

இன்றைய காலக்கட்டத்தில் உலகின் அனைத்து செய்திதொடர்பு நிறுவனங்களாலும் பரப்பபட்டு வரும் ஒரு செய்தி இஸ்லாமிய தீவிரவாதம்இவர்களின் செய்திகளில் எது இருக்கிறதோ இல்லையோ இது கண்டிப்பாக ஒரு வரியாவது இருக்கும். ஒரு செய்தியை திரும்ப திரும்ப சொன்னால் அது சாதாரண மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை, உதாரணம், விளம்பரங்கள்,திரைப்பட முன்னோட்டங்கள் போன்றவை. உலகில் உள்ள இஸ்லாமிய எதிராளிகளின் இஸ்லாமிய தீவிரவாத விளம்பரதாரர்கள் இந்த பத்திரிகையாளர்கள். இவர்களுக்கு தேவை பணம், மற்றும் இவர்களின் செய்திதாள்களின் விற்பனை அதற்க்கு இவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள்...!!!!!!!!!    

இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுபாடுதல் என்பது பொருள், இது ஸலாம் என்ற வார்த்தையில் இருந்து வந்தது ஸலாம் என்றால் அமைதி அடைதல் என்பது இதன் பொருள். ஆகவேதான் இஸ்லாமியர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் பொது அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக) என்று கூறுகின்றனர். இந்த வார்த்தையை யார் யாரிடம் வேண்டுமென்றாலும் கூறலாம்,அனைத்து நேரத்திலும் கூறலாம். பெயரடிப்படையில் இஸ்லாம் இஸ்லாம் பயங்கரவாததிர்க்கு அப்பாற்ப்பட்டது என்பதை விளங்கலாம்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எதுஎன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எதுஎனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும்,நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். - நூல்: புகாரி 12.
நன்றாக கவனியுங்கள் இங்கு முஸ்லிம்களுக்கு மட்டும் என்றில்லை பசித்தோருக்கு,அறிந்தவருக்கும் அறியாதவர்களுக்கும். மேலும் 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - நூல்: புகாரி 2472, மேலும் இந்த உலகில் ஒரு மனிதனை அநியாயமாக ஒருத்தன் கொலை செய்தால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் கொலை செய்தவனாவான், மேலும் ஒரு மனிதனை காப்பாற்றினால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் காத்தவன் ஆவான் – 5:32 அல் குர்ஆன்.
ஆக ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாகஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும்இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம்முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராகபொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் மனிதர்களே அல்ல அவர்கள் எப்படி இஸ்லாமியர்களாக இருக்க முடியும்?
தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல். ஆக இப்படிப்பட்ட செயல் உலகில் அனைத்து மததவர்களிடமும் உண்டு ஆனால் இங்கு இந்த சாயம் இஸ்லாத்திர்க்கு மட்டுமே பூசப்படுகின்றது உண்மையை சொன்னால் உலகில் அதிகம் பாதிக்கப்படுவது, கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள்தான், உதாரணம், ஈராக்,பாலேஸ்தீன், லெபனான், ஆப்கானிஸ்தான்,லிபியா, போஸ்னியா, சிரியா இன்னும் உலகில் பல நாடுகளில்.  

மேலும் ஒரு சில மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாம் காஃபிர்களை கொல்ல சொல்கின்றது என்ற வசனத்தை (வரியை) மட்டுமே எடுத்துக்கூறி இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்கின்றனர் ஒரு விஷயம் புரிந்துக்கொள்ள வேண்டும் அந்த வசனங்கள் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் போர்கள் நடந்த சமயத்தில் இறக்கப்பட்ட வசனங்கள் போரில் எதிராளியை கொள்ளத்தான் சொல்வார்கள் எந்த அரசாங்கமும் அன்றைய காலத்தில் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் இந்த காஃபிர்கள் (இறைமறுப்பாளர்கள்). 

உல்கைல் பொதுவாக ஒரு பழமொழி உண்டு ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு படம் என்று ஆனால் உண்மை அதுவல்ல ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திர்க்கும் நீங்கள் ஒரு சிலரை பார்த்து முடிவுசெய்தால் அது முற்றிலும் தவறான கன்னூட்டம். உங்க நெஞ்சில் கைவைத்து படைத்தவனுக்கு அஞ்சி சொல்லுங்க உங்ககளுக்கு அருகில் இருக்கும் இஸ்லாமியர் தீவிரவாதியா, உங்களுடன் அன்பாக பழகும் பக்கத்துவீட்டு இஸ்லாமியர் தீவிரவாதியா??நாங்க ஹிந்துக்கள் அனைவரையும் பாசிச வெறியர்கள் என்று என்றைக்கும் சொன்னது கிடையாது..!!!!!!!!!!!!! நான் பழகிய பெருபாலன ஹிந்துக்கள், மற்றும் எனது ஹிந்து நண்பர்கள் அனைவரும் அன்பானவர்கள், அமைதியை விரும்புபவர்கள்...!!!!!!!!!!!!!

உங்களுக்கு இதுக்குறித்து ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்க்கலாம்.

திங்கள், 26 மே, 2014

ஐபிஎல் இவங்களே வைப்பாங்கலாம், இவங்களே எடுப்பாங்கலாம்.


நேற்றைய தினமும் அதற்க்கு முந்தைய நாள் நடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளை பார்த்தால் தெரியும் இது அப்பட்டமான ஏமாற்று வேலை மற்றும் பக்காவான நிர்ணயிக்கப்பட்ட ஒரு விளையாட்டு என்று.

1.   அதாவது முதல் ஆட்டத்தில் கோல்கத்தாவிர்க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 15.2 ஓவர்களில் 161 ஓட்டங்கள் எடுக்க வேண்டும், இது சாத்தியமே என்று வைத்துக்கொண்டாலும் அதை யூசுஃப் பதான் அடித்தது கண்டிப்பாக இது ஒரு மேட்ச் பிக்ஸிங்க் என்பது நிருபணமாகின்றது எப்படி? யூசுஃப் பதான் கடந்த ஓராண்டுக்கு மேலாக அதிகளவில் போட்டிகளில் பங்குபெறவில்லை மேலும் அவர் இது வரை ஆடிய ஆட்டங்களை பார்த்தால் தெரியும் அவர் கொஞ்சம் கூட பார்மில் இல்லை என்று ஆனால் அவர் அடித்து இலக்கை அடைகிறார்.
2.   அடுத்து நேற்றைய தின ஆட்டமும் இதே மாதிரி மும்பை அணி 14.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் வேண்டும், இதுவும் ஒரு பேச்சுக்கு சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும் இங்கேயும் அதே மொள்ளமாரித்தனம்தான் இது வரை ஒரு ஆட்டங்களில் சாதிக்காத கொஞ்சம் கூட பார்மில் இல்லாத கோரி ஆண்டேர்சன் அதை நிகழ்த்துகிறார்.
3.   மேலும், கடந்த 20-20 உலகக்கோப்பை வரை பயங்கர பார்மில் இருந்த விராட் கோஹ்லி படுபயங்கரமாக சொதப்பி வருகிறார்.

இதையெல்லாம் வைத்து பாருங்கள் இது எல்லாமே முன்னாடியே நிர்ணயிக்கப்பட்டது. இந்த மெச்சில் இந்த வீரர்தான் விளையாடனும் அப்படினு குதிரை ரேஸில் பணம் காட்டுவது போன்று கட்டிவிட்டார்கள் அப்படி அந்த வீரர்கள் தப்பித்தவறி கேட்ச் குடுத்தாலும் பிடிக்க கூடாது இதுதான் மேட்ச் பிக்ஸிங்க் இதுதான் ஐபிஎல். மேலும் அருமையான வீரர்களைக்கொண்ட டில்லி அணி ஏன் தோல்வியை மட்டுமே தழுவிக்கொண்டு இருக்கின்றது அதற்க்கும் கட்டிவிட்டார்கள் பணத்தை அது தெரியக்கொடாது என்றுதான் முதல் இரண்டு ஆட்டங்கள் ஜெயித்து மக்களை நம்பவைத்தார்கள்.

#ஐபிஎல் இவங்களே வைப்பாங்கலாம், இவங்களே எடுப்பாங்கலாம்.     


திங்கள், 28 ஏப்ரல், 2014

புரோட்டா வாழ்க.


ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.

மறதி நாம் நாட்டின் தேசியவியாதி



அரசியல்வாதிகள் உண்மையை மட்டும் பேசும் ஒரே தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். ஆம் எந்த ஒரு அச்சுரத்தலும் இல்லாமல் யாருடைய அடக்குமுறையும் இல்லாமல் தான் செய்ததையும் தன்னுடைய எதிரி செய்ததையும் மிக அழகாக மேடைபோட்டு சொல்லும் ஒரே தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். இவனை பத்தி அவனும் அவனை பத்தி இவனும் மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் உன்னதமான தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். ஆனால் ரெண்டு பேருமே திருடனுங்கதான். இதுல மூணாவது நம்மாளு ஒருத்தர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்......ஏய் தம்பி பேப்பர ஒழுங்கா காட்டுடா”....!!!!!!!!!!!!!!

தேர்தல் பிரச்சாரத்தில் மேடைப்போட்டு சொல்லும் சொத்து விவரங்கள் எல்லாமே சிபிஐக்கும், வருமானதுரைக்கும் முன்னரே தெரியாமல் போனதுதான் எப்படி என்று மக்கள் சிந்தித்ட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....!!!!!!!!!!!!!

ஒவ்வொரு முறையும் இவர்கள் கேட்பது எங்களுக்கு வாக்களிப்பேன் என்று வாக்குறுதி தருவீர்களா? நியாயமா பார்த்தா நாமதான் அவர்களை பார்த்து கேட்க்கவேண்டும் சொன்னதை நீங்க செய்வீர்களா என்று?  அட இதுக்குடா பரவாயில்லை இன்னும் சில பக்கிகள் நடப்பது பாராளமன்றாமா இல்லை நாடாலாமன்றம் தேர்தலா என்றே தெரியாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசிகளை குறைபோம்,  எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கொடுங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள் இவர்களின் மனுதாக்களை அனுமதித்த தேர்தல் கமிஷனை என்ன சொல்வது...!!!!!!!!!!!

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?
மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

இன்று பல பேர்கள் யாராவது கொஞ்சம் நல்லவர் வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் உள்ளார்கள், ஆனால் யாருமே தகுதியானவர் வரவேண்டும் என்று நினைப்ப்தே இல்லை. தகுதியானவர் வரவேண்டும் என்றால் ஜெயிக்கிற பக்கமே சாய்வோம் என்று நினைக்காமல், துட்டுக்கு விசுவாசமாய் வோட்டு போடாமல் இருந்தாலே போதும் ,நல்ல மாற்றம் வரும்

புதன், 2 ஏப்ரல், 2014

உட்கார்ந்து யோசிச்சது-2014

மகன்:- I am a complan boy
மகள்:- I am a complan Girl 
தந்தை:- என்ன கொடுமைடா இது, நான் பெத்த புள்ளைங்க கண்ட கண்டவன் பேரையெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுது.

நீதிபதி:- இந்த கோர்ட்டில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அரசியல்வாதி:- உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனார்.
நீதிபதி:- ????????????????


நீதிபதி:- சாகரதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
குற்றவாளி :- என்னை தலைகீழா தூக்குள போடணும் எஜமான் .
நீதிபதி:- ????????????????

"உங்க மெஸ்ல, கல்யாணம் ஆனவங்களுக்குதான் வேலை குடுபீங்களா?
"ஆமா அவங்கதான் கீழ்படிதலா வேலைப்பாப்பாங்க
"சரி ... கல்யாணம் ஆனவங்களைதான் மெஸ்லே சேர்ப்பீங்கலாமேய அது ஏன்??
" யோவ் அவன்தான்யா எத குடுத்தாலும் பேசாம சாப்பிட்டுவிட்டு போவான்.. 


"என்னதான் நெருப்புக்கோழியா இருந்தாலும் அவிச்ச முட்டை போடாது!!!!!!!!!!!!!!!

மாணவன்1:- டேய் மாப்ளே தென்னை மரத்துல ஏரிப்பார்த்தாள் ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியுதுடா
மாணவன்2:- கைய விட்டு பாரு மச்சி மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியும் ட.... 

நர்ஸ்:- ஐய்ந்து நிமிடம் கழிச்சு வந்திருந்தால் இவரை காப்பாத்தி இருக்கலாம்
நபர்:- எப்படி??
நர்ஸ்:- டாக்டர் ஊருக்கு போயிருப்பார்!!!!!!!!!!!!!!!!!

படித்ததில் ரசித்தது:- 

எதேச்சையாக தொடும்போது பாக்கெட்டில் மொபைல் இல்லாதது போலத்தோன்றும் அந்த ஒரு நிமிட உணர்வை, நமக்கு அப்படிபட்ட திகில் படத்தாலும் தர முடியாது.....

பாசிடிவ் பதில்:-

ஆசிரியர்:- 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ளே கட்டுராங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ளே கட்டுவாங்க???
மாணவன்:- ஏற்கனவே கடின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டனும். 


எப்பவும் இந்த நிகழ்ச்சியில் ஒரு டச்சு வைக்காம இருந்ததில்லை!!!!!!!!!!!!!

கருவறையில் இருக்கும் வரைதான் உன்னை எதிர்ப்பார்க்கும் இந்த உலகம். 
வெளியில் வந்துவிட்டால் நீதா எதிர் கொள்ளவேண்டும் இந்த உலகை...!!!!
#தெருவோரத்தில் அனாதைகள்...!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

மார்ச்.31: ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.


April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது

புதன், 26 பிப்ரவரி, 2014

இது போல ஒரு கூட்டமைப்பு இருந்தால் காட்டுங்கள்..!!!!


அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆயிரம் முகநூலைவிடவும், அதைவிட அதிகமான வாட்ஸப்பை விடவும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம், சாதனம் நம்மிடம் (இஸ்லாமியர்களிடதில்) உள்ளதென்றால் அது வேறொன்றுமில்லை, நமக்கு வலியுறுத்தி சொல்லப்பட்ட வெள்ளிக்கிழமை ஜும்மாதான். ஆனால் அதை இன்று நாம் இஸ்லாமியர்கள் யாருமே சரியாக பயன்படுத்திக்கொள்வதாக தெரியவில்லை. நான் இங்கு சொல்ல போவது இஸ்லாமிய அடிப்படையில் இந்த ஜும்மா நடைபெறுகிறதா என்றில்லை...!!!!! இது வேற மாதிரி...!!!!!!!!!!!!!

இன்று நடக்கும் எந்த ஒரு மார்க்க விளக்க கூட்டமாக இருந்தாலும் ஏதாவது ஒரு இயக்கம் நடத்த வேண்டும் அப்படியே அவர்கள் அழைத்தாலும் அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் அதிகமானோர் வருவார்களே தவிர மற்ற இயக்கதினர் அதிகளவில் வருவது கிடையாது. இதில் நாம் எந்த அளவிர்க்கு இஸ்லாத்தை எத்திவைக்க முடியும்? இன்று சமூக வலைதளங்களையும், முகநூலையும், வாட்ஸப்பையும் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் இருந்தாலும், வயதானவர்கள், சிறுவர்கள், மேலும் பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள் அடிப்படை கல்வி இல்லாதாவர்கள் இப்படியானவர்கள் யாரும் அதை பயன்படுத்துவதில்லை. அப்படியே அதை பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர் அதை முழுமையாக தாவாவிலும், நல்லொலுக்கத்தையும் பேணுகிறார்கள், இன்று இயக்கங்களுக்கிடையில் நடக்கும் பனிப்போருக்கு  மட்டுமே இந்த இயக்க வாதிகள் இதை பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மட்டுமில்லை, இளைய தலைமுறைக்கூட புகைப்படங்களை போடுவதற்க்கும், நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்க்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் தௌஹீத் என்று சொல்லிக்கொள்வோர்க்கூட பெருமைக்கு சொல்லவில்லை சொல்லவில்லை என்றுக்கூறிக்கொண்டே பல பதிவுகள் அவர்களுக்கே தெரியாமல் பெருமையாக வருகின்றன என்ன அல்ஹம்துலில்லாஹ், சுபஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் என்று போடுவது மட்டுமே ஆறுதல்.

இந்த கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது பேச்சு பேச்சாதான் இருக்கணும் இதுதான் இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தும் மார்க்க கூட்டங்கள் எல்லாமே..!!!!! இஸ்லாமிய ஒற்றுமை என்பது இந்த சமூக வலைத்தளங்களில் வசைபாடுவதில் மட்டும்தான் இருக்கு.

ஆனால் சுபஹானல்லாஹ் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டை பாருங்க வாரந்தோறும் ஒரு நாள் படிச்சவன் படிக்காதவன், பணக்காரன், ஏழை, சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள், திருடுகிறவன், குடிப்பவன், கூத்தடிப்பவன் ஏன் இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தின் அடிப்படையை கூட தெரியாதவன் இந்த ஜும்மாவில் கலந்துக்கொள்ள செய்துள்ளான் இது எப்பேற்பட்ட ஒரு ஏற்பாடு.....!!!!!!! இதை நாமும், நம்முடைய சமுதாயத்தில் மார்க்கத்தை கற்று அறிந்த ஆலிம்களும், உலமாக்கலும், மதனிகளும் இன்னும் பலர்களும் சரியாக பயன்படுத்துகிறோமா?  என்றால் அங்கே மில்லியன் டாலர் கேள்விகள்தான் மிஞ்சும்.

எத்தனை ஊர்களில் இந்த ஜும்மா மேடையில் நாட்டின் நடப்புகளை பேசுகிறார்கள், கல்வியின் அவசியத்தை சொல்கிறார்கள், அல்லது அந்த அந்த ஊரின் நடப்புகளை  பற்றியாவது பேசுகிறார்களா? பெண்களை குறைந்தது ஜும்மாவிர்க்கு அனுமதிக்கிறார்களா? இன்று தமிழகத்தில் வாராவாரம் பெண்களை ஜும்மாவிர்க்கு அழைத்திருந்தாலே நமது சமுதாய பெண்களை கேடுகெட்ட சீரியல் பார்ப்பதைவிட்டும், பள்ளிலுத்து அண்டை ஆடவருடன் பேசுவதைவிட்டும், அல்லக்கைகளுடன் ஓடிப்போவதை விட்டும் தடுத்திருக்கலாமே. நாமதான் விரலாட்டினாலே விரட்டியடிக்கிறோமே, தொப்பிப்போட்டால் தோரத்துகிறோமே..!!!!!!!!

அப்படி இல்லை நாங்கள் வாராவாரம் பயான் செய்கிறோமே என்று நீங்கள் சொன்னால்?? எதை சொல்கிறீர்கள் தொழுகையைபற்றி, ஈமானைப்பற்றி, நோன்பைப்பற்றி (அதுவும் சீஸன் மாம்பழம் போல அந்த மாதம் மட்டும்தான்) மறுமையைப்பற்றி சந்தோஷம், ஆனால் ஊரில் நடக்கும் சிர்க்காண காரியத்தை எதிர்த்து பேசியுள்ளீர்களா? மௌலீதை எதிர்த்து ஒரு ஜும்மாவில் ஒரு வரி பேசியிருப்பீர்களா? வட்டியின் கொடுமையை விளக்கியிருப்பீர்களா? வரதட்சணை ஒரு வன்கொடுமை என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பீர்களா? இன்னும் குடி, வீண்விரயம், நட்பு, சொந்தம், அண்டைவீட்டார் இப்படி எதைப்பற்றியாவது பேசியிருப்பீர்களா? இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை மட்டுமே பேசி பேசி பேசி....!!!!!!! மற்ற எதையும் தெரிந்தக்கொள்ள வாய்ப்பே அளிக்காமல் இந்த ஜும்மா உரைகளை வீனடித்ததுதான் மிச்சம்.

இஸ்லாத்தில் இரண்டு பெருநாள் தொழுகைக்குக்கூட இந்த அளவிர்க்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை நபியவர்கள்...!!!!! ஊரில் நடக்கும் அநியாயத்தையும், மார்க்கத்திர்க்கு எதிராக நடக்கும் அவலங்களையும் வாராவாரம் பேசியிருந்தாலே இன்று இயக்கங்களுக்கு வேலை இருந்திருக்காது..!!!!!!!!!!!! இன்று கூட பல ஊர்களில் பல பள்ளிகளில் அதை நிர்வாகிக்கும் நிர்வாகி சொல்வதைதான் பேசவேண்டும் இது மாற்ற முடியாத விதியாக உள்ளதே...!!!!!!!!!!!!!!!! இதுல கொடுமை என்னவென்றால் மார்க்கத்தை கற்று அறிந்த ஹஜ்ரத்மார்களே இந்த மரமண்டை நிர்வாகிகளின் பேச்சைக்கெட்டு இறைவனுக்கும், ரசூலுக்கும் மாறு செய்கின்றனர் என்பதே நினைத்தால்....!!!!!!

இப்படி அனைத்து ஊர்களிலும் ஜும்மா நடக்கும் அனைத்து பள்ளிகளிலும் மக்கள் கூடுவார்களே, இப்படி ஒரு கூட்டம் வேறு எங்காவது கூட்ட முடியுமா?? இஸ்லாமிய சொந்தங்களே சிந்தித்துப்பாருங்கள். நம்முடைய ஜும்மா உலகின் எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது எந்த இயக்கம், அரசாங்கம் நினைத்தாலும் கூட்ட முடியாத ஒரு ஏற்பாடு இது இறைவனின் ஏற்பாடு அதை சரியான முறையில் இனியாவது பயன்படுத்துவோமா????....!!!!!!!!!!!!!!!!!!!!!!       


குறிப்பு:- எனக்குத்தெறிந்து தௌஹீத்ஜமாத் இந்த ஜும்மா மேடையை சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு தெரிந்தது இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

புதன், 19 பிப்ரவரி, 2014

அன்னை தேசம் - இது வேற மாதிரி..!!!!!

யோசிங்க யோசிங்க, வித்தியாசமா ஏதாவது யோசிங்க ஆனா யோசிக்கிற அனைத்தையும் நம்பிடாதீங்க, யோசிச்சு பாருங்க நான் சொன்னது உண்மைனு புரியும். 

இதை ஏன் சொல்றென்னா கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் அப்படின்னு இந்திய அரசியல் சாசநானும் சொல்கிறது ஆனா பாருங்க எந்த ஒரு அரசனும் தீரவிசாரித்து தீர்பளித்தாக சரித்திரமே இல்லை. முல்லைக்கு தேர் குடுத்தான் பாரி என்பார்கள் பயபுல்லை எவ்வளவு முட்டாளாக இருந்திருப்பான் காட்டுல இறைவன் நாட்டப்படி அந்த கொடி எப்படியும் படர்ந்துவிடும் இவன் அங்கே தேவையில்லாமல் தேர குடுத்தாதற்க்கு மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம். இப்படி முட்டாள் கதைகளை சொல்லி சொல்லியே நாம் அன்னைதேசத்தை குட்டிசுவராக்கி வைத்துள்ளார்கள் வரலாற்று வல்லுனர்கள். 

இன்று காலை முகநூலில் ஒரு வீடியோ அதில் ராஜ் டிவி நிகழ்ச்சி பட்டிமன்றம் என்று நினைக்கிறேன் அதில் ஒரு பெண் நம் அன்னைதேசத்தை பத்தி மிக அழகாக பேசினார் பாராட்டுக்கள் அதில் இருந்து சில வரிகள். 

  1. தமிழக விவசாயி தண்ணீர்கேட்டால் ஒரு அமைச்சர் சொல்கிறார் விவசாயிகள் எல்லாம் சேர்ந்து மூத்திரம் பெய்தால் கிடைக்கும் என்று. 
  2. அடுத்து மீனவர்கள், மீன்கள் தரையில் வந்தால் செத்துவிடும் இது வீதி, மீனவர்கள் கடலுக்குள் போனால் சாவார்கள் இது யாரோ செய்த சதி. 
  3. படிச்சவன் பாடம் நடத்துகிறான், படிக்காதவன் பாடசாலைகள் நடத்துகிறான். 
  4. வெளிநாட்டில் வேலை செய்தால் பணம் கிடைக்கும் அன்னை தேசத்தில் பணம் குடுத்தால் தான் வேலையே கிடைக்கும். 
இப்படி அந்த பெண் பேசிய அத்தனைக்கும் நம் அன்னைத்தேசம் வெண்ணைதேசமாய்....!!!!!!!!!!!!! அவள் அந்த பட்டிமன்றத்தில் வெற்றிபெற பேசுகிறாள் என்று எதிர்வாதிகள் சொன்னாலும் அவள் பேசினது அத்தனையும் நிதர்சன உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. 


நேற்றை செய்தி ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேருக்கு தூக்குதண்டனை ரத்து ரொம்ப சந்தோஷம் (அவர்கள் நிரபராதிகளாக இருந்தால்), ஆனால் அவர்கள் குற்றவாளியாக இருந்தால் இவர்களின் மதசாற்பை என்னவென்று சொல்வது குற்றமே நிரூபிக்க படாத அப்சல் குருவை அநியாயமாக அவசர அவசர மாக தூக்கிலிட்டார்களே இனி யாரும் சொல்லிடாதீங்க இந்தியா மதசார்பற்ற நாடென்று அப்புறம் அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்...!!!!!!!!!!!!!

மேலும் இந்த மூவரின் தூக்கை ரத்து செய்ததர்க்காக பல இஸ்லாமிய அமைப்புகள் கொதிக்கின்றனர் நியாயமே...!!! அப்சல் குருவை ஏன் தூக்கிலிட்டீர்கள் என்று கூச்சலிடுங்கள் அது நியாயம் ஆனால் இவர்களை ஏன் இடவில்லை என்று கேட்டு கூச்சலிடுவது எந்த வகையில் நியாயம் யாருக்குத்தெரியும் இவர்கள்தான் குற்றவாளிகள் என்று.....!!!!!!!!!!!! 

இதற்க்கு பதிலாக தமிழக சிறைகளில் பல்லாயிரம் கணக்கில் இஸ்லாமியர்கள் அந்த ஒரு தவறும் செய்யாமல் கிடக்கிறார்கள் அதுக்கு ஒரு சிறை நிறுப்பும் போராட்டம் செய்ய எந்த ஒரு அமைப்பும் முன் வரவில்லையே!!!!


என்ன இப்ப திரும்பவும் முதல் பாராவை படிங்க....!!!!!!!!!!! 
# என்ன நான் சொல்றது...!!!!!!!!!!!

வியாழன், 30 ஜனவரி, 2014

உட்கார்ந்து யோசிச்சது

 "என் தேசத்தை நாசமாக்கிய சொல் "இலவசம்" 

பஞ்ச்:-
1. கண்ணா பன்னிங்கத்தான் கூட்டமா எக்ஸாம் எழுதும், சிங்கம் சிங்கிலாத்தான் அரியர்ஸ் எழுதும்.
2. தூண்டிலில் சிக்கிய மீனும், காதலில் சிக்கிய ஆணும் துடித்துதான் ஆகணும் அது விதி. 
3. 100 கிலோ அரிசிமூட்டை அதை தூக்குறவனுக்கு அதை வாங்க சக்தி இல்லை, 100 கிலோ அரிசிமூட்டையை வாங்குரவனுக்கு அதை தூக்க சக்தியில்லை (தொழிலாளி மற்றும் முதலாளி)

தத்துவம்:- 

ஒரு பொண்ணுகிட்டே போயி உன் அப்பாட்டக்கருனு சொன்னா தப்பில்லை அதுவே ஒரு அப்பாக்கிட்டே போயி பொண்ணு டக்கருன்னு சொன்னா...???????

டாக்டர் ஜோக்:-

நர்ஸ்:- டாக்டர் எதுக்காக இப்படி அழறீங்க???
டாக்டர்:-  நான் காலைலே ஆப்பேரசன் பண்ணின பேஷண்ட் செத்துட்டாறு...
நர்ஸ்:- யோவ் டுபுக்கு நீன் காலைலே பண்ணினது ஆபேரசனில்லை, போஸ்ட்மார்ட்ம் !!!!

டச்சிங்:- 

மனசுக்கு புடிச்சவங்க முன்னாடி அழுவதும், மனசுக்கு புடிக்காதவங்க முன்னாடி சிரிப்பதும் ரொம்ப கஷ்டம். 

ஆபீஸ் ஜோக்:-

லீவ்லே இருக்கும் பொது ஆபீஸ் கால் வந்தா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா? ஏன் ?
நீங்க மட்டும் ஆபீஸ் நேரத்துல பர்சனல் பண்ணக்கூடாதுன்னு சொல்றீங்களே அது ஏன் ?

பட்டு சேலை கட்டுனா எல்லாப்பொண்ணுங்களுக்கும் எடுப்பாதான் இருக்கும்.அதை வாங்கித்தரும் புருசனுக்குத்தான் கடுப்பா இருக்கும்



புதன், 29 ஜனவரி, 2014

இதாங்க உண்மை.


இதாங்க உண்மை.

இந்த உலகத்துல எல்லோருமே அடுத்தவங்க செய்வதை தப்புனு சொல்லுவாங்க ஆனா அவர்கள் செய்தால் சரி காண்பார்கள். இதற்க்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஹிட்லர் செய்தது கொடுமை என்று சொல்லும் அதே ஊடகம்தான் அமெரிக்கா செய்வதை சரி என்கிறது. சதாம் செய்தது பாவ செயல் என்றுக்கூறிக்கொண்டே அந்நாட்டு மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா. ஒசாமா ஒரு தீவிரவாதி என்று சொல்லிக்கொண்டே ஓவேரா தீவிரவாத செயல் செய்தது இந்தே அமெரிக்கா.

மூணு பேர் வந்தால் மூன்று லட்சம் என்று எழுதும் இந்த ஊடகங்கள் நேற்றைய இஸ்லாமியர்களின் போராட்டத்தை பற்றி ஒன்றுமே சொல்லாதது ஒன்றும் வியப்பில்லை மீண்டும் நிரூபித்துள்ளனர் நாங்கள் விபச்சாரிக்குத்தான் வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதுவோம் என்று.

அடுத்தவன் கூட படுத்து எழுந்திருக்கும் சினிமாக்காரகளுக்கு பெரிய பெரிய விருதுகள். ஆனால் அடுத்தவன் பசியை போக்கும் விவசாயிக்கு தூக்குகயிறுகள் (தற்கொலைகள்). கோடியில் புரளும் நடிகைகளுக்கு கோவில் கட்டும் உன்னதமான ஒரே நாடு தமிழநாடுதான், இங்கே சேத்தில் உழைப்பவனுக்கு வீடு கட்ட ஒரு செங்கல் கூட குடுப்பதில்லை. இங்குதான் தல, தளபதி, அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என இப்படி எல்லா ஸ்டார்களுக்கும் ரசிகர்கள், ஆனால் இவர்களுக்குத்தான் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு போகக்கூட துப்பில்லை.     

பல விளையாட்டுக்களில் சாதிக்க நினைக்கும் பல திறமைவாதிகள் இருக்கும் நாட்டில் ஒரே ஒரு விளையாட்ட மட்டும் பிடித்துக்கொண்டு நாடு தோற்றுவிட்டால் இவர்கள் என்னமோ வீட்லே எழவு விழுந்த ரியாக்சன் குடுக்குறாங்க.

மனிதர்களை வெறுக்கும் நாம்தான் மரங்களை அறுக்காதீர்கள் என்று உளறிக்கொண்டிருக்கிறோம், சத்தியம்தான் வெல்லும் என்று சொல்லிக்கொண்டு சகட்டுமேனிக்கு திட்டுகிறோம். வரம்பு மீறுபவர்களிடம் வரம்பு மீறலாம் என்று ஒரு வரியை வைத்துக்கொண்டு, வரிப்புலியாய் கீறிக்கொண்டிருக்கிறோம்.   

கடைசியாக வெறுப்பு ஒரு பசியை போல இயங்குகிறது. வெறுப்பு மிகுந்தவர்கள் ஒரு மலைப்பாம்பை போல் யாரையேனும் பிடித்து விழுங்கும் ஆவேசத்தில் காத்திருக்கிறார்கள்.

புதன், 22 ஜனவரி, 2014

இன்னும் நம்பனுமாம் இந்தியா மதசார்பற்ற நாடாம்...!!!!!!!!!!



குற்றசாட்டு இல்லாமல் கூட்டுமனசாட்சி அடிப்படையில் அப்சல்குரு என்கிற முஸ்லீமுக்கு அவரது குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காமல் தூக்கிலிடுவார்கள். காரணம் அவன் முஸ்லிம் என்பதால். காவல்துறை அதிகாரிகளை கன்னிவெடி மூலம் கொலை செய்த கொலையாளிகளை குடும்பத்தினருக்கும்

அரசியல்வாதிகளுக்கும் தெரிவித்து, அவா்களை போராட்டம் நடத்த செய்து, ஜனாதிபதி அவா்களை தாமதமாக்கி பின்னர் அவா்களின் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டணையாக மாற்றுவார்கள். காரணம் இவா்கள் இந்து மதத்தை சேர்ந்தவா்கள்

இது தான் இந்தியாவின் நீதி! இன்னும் நம்ப வேண்டுமாம் இந்தியா மதசார்பற்ற நாடு என்று! இறைவனின் முன்னால் இவா்கள் நிற்கும்போது உணருவார்கள்!