OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 25 டிசம்பர், 2013

இது பிரியாணி பட விமர்சனமில்லை..!!!


இன்று முஸ்லீம்களை வேரோடு அழிக்க நினைக்கும் யாருமே அவர்களுக்கே உரித்தான இந்த பிரியாணியை கண்டால் வியர்க்க வியர்க்க தின்பதை பார்க்கிறோம், இதில் அவாளும் அடங்குவார்கள்..!!! சரி இந்தே பிரியாணியின்  பிறப்பிடம் எதுவென்று நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்??

பிரியாணி என்பது அரிசிமசாலாப் பொருட்களுடன் முட்டைஆடுகோழிமீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் bery(பெ) (بریان) என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. 
பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாதுதென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.

இதை தயாரிக்க தேவையான பொருள்கள்:-

நெய், ஜாதிக்காய், மின், மிளகு, கிராம்பு, ஏலக்காய், கறுவா, பட்டை இலைகள், கொத்தமல்லி, புதினா இலைகள், இஞ்சி, வெங்காயம், மற்றும் பூண்டுஎன்பன பிரியாணியில் பயன்படுத்தப்படும் சில நறுமணப் பொருள்களும் தாளிதப் பொருள்களும் ஆகும். உயர்ந்த வகைகளில் குங்குமப்பூவும் சேர்க்கப்படும். சிலர் நறுமணப் பொருட்களை ஒரு துணியில் முடிந்து பிரியாணி வேகும்போது போட்டுவைத்துவிட்டு, சாறு இறங்கியதும் எடுத்துவிடுகிறார்கள். அசைவ பிரியாணிகளில் இந்த நறுமணப் பொருட்களுடன் முதன்மை சேர்பொருளாக இறைச்சிமாட்டிறைச்சி, கோழிக் கறி,ஆட்டு இறைச்சி, மீன் அல்லது இறால் இருக்கும். பிரியாணியுடன் தயிர் பச்சடி(இது ராய்த்தா(கன்னடம்) எனவும் வழங்கப்படுகிறது.), குருமா, கறிகள்,சாலட், சுட்ட கத்தரித் துவையல் அல்லது அவித்த முட்டை ஆகியனவும் துணை உணவாகத் தரப்படும்.
நறுமணமிக்க பாசுமதி அரிசியைத் தனியாக வேகவிட்டு இறைச்சி அல்லது தாவரக் கறிகள் தனியாக சமைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக விரவிப் பரிமாறுவது பிரியாணித் தயாரிப்பின் தனித்தன்மையாகும். உண்பவர் நறுமணமுள்ள சோறு, அடுத்து சுவையூட்டப்பட்ட கறிகள் என மாறி மாறி உண்பதில் இன்பம் பெறுகிறார்.

பிரியாணியின்  வகைகள்:-

இந்திய வகைகள்

ஆம்பூர் பிரியாணி
ஐதராபாத் பிரியாணி
தலைப்பாக்கட்டி பிரியாணி
திண்டுக்கல் பிரியாணி
சங்கரன்கோவில் பிரியாணி
பட்கல் பிரியாணி
கச்சி பிரியாணி
இலக்னோவி (அவத்) பிரியாணி
கொல்கத்தா பிரியாணி
தலைச்சேரி அல்லது கண்ணூர் பிரியாணி

ஏனைய நாடுகளில்

சிந்தி பிரியாணி
மெமோனி பிரியாணி
தஹரி
பர்மிய பிரியாணி
தாய்லாந்து பிரியாணி
இலங்கை பிரியாணி
ஈரானிய பிரியாணி
மத்திய கிழக்கில் பிரியாணி
மலேசியாவில் நாசி பெரியாணி
சிங்கப்பூர்
பிலிப்பைனில்
மொரீசியசு பிரியாணி
நாசி கெபூலி

பொதுவான வகைகளாக

மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
இறால் பிரியாணி
மீன் பிரியாணி
தால் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி

திங்கள், 16 டிசம்பர், 2013

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும் - மீள் பதிவு

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும்.



இந்த கட்டுரை இனிய திசைகள் என்கின்ற மாத இதழில் வெளிவந்தது, உங்கள் பார்வைக்காக!!!! இஸ்லாமியகள் இட ஒதுதுக்கீடு என்றதும், பலபேர் பலவிதமாக பேசுவார்கள் ஆனால் இந்த கட்டுரை எழுதியவர் மிகவும் சரியான கருத்துக்களை அலசி ஆராய்ந்து கூறியுள்ளார் என்றே தோன்றுகிறது.ஏன் முஸ்லிம்களிலேயே சில பேர் இது தேவையில்லை என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னுக்கு வராது என்று!!!!!

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

நாம் உண்மையாக இருக்கோமா??



இன்று உலகில் உள்ள எவரும் சொல்ல முடியாது நான் பொய்யே சொன்னதில்லை என்று!!!!!!!!!! இன்று ஒவ்வொரு வாழ்க்கையிலும் இந்த பொய்யானது ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. பொய் சொல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில்தான் இருக்கிறான் மனிதன்.

ஏன் நம்மால் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாதா?? கண்டிப்பாக முடியாது...!!! ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை அறியாமலே சொல்லிவிடுவோம். இந்த பொய் சொல்லும் பழக்கம் நம்முடைய குழந்தைப்பருவத்தில் இருந்தே நமக்கு நிலாச்சோருடன் ஊட்டப்படுகின்றது ஆம் அன்று நம் அன்னை நிலாவைக்காட்டி அதில் பாட்டி வடைசுடுகிறாள் பார் என்று பொய்ய்யான ஒன்றை சொல்லித்தான் நமக்கு சோத்துடன் சேர்த்து பொய்யும் ஊட்டப்படுகிறது…!!!!!

இந்த பொய் எப்படியெல்லாம் சொல்லப்படுகின்றது என்று பார்த்தால், பள்ளியில் வாத்தியாரிடம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோரிடம் கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், நண்பர்கள் மத்தியில் என்று எந்த ஒரு பாராப்சமுமின்றி சொல்லப்படுகின்றது..!!!!!!!!!! இதில் 90% சதவிகித பொய்கள் பெரும்பாலும் சின்ன சின்ன விசயங்களுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. அதுவும் இந்த மொபைல் டெக்னாலஜி வந்த பிறகு முகம்தெரியாது என்பதால் இந்த விளையாட்டுப்பொய்கள் இன்னும் அதிகமாகிவிட்டன...!!!!!!!!!!!!!!

இப்படி நாம் சொல்லும் பொய்களானது மூன்றாவது நபர்கள் வேண்டுமென்றால் கண்டுக்காம இருந்துவிடுவார்கள், ஆனால் உங்களையே ரொம்ப நேசிக்கும் ஒருத்தரிடம் நீங்கள் விளையாட்டாய் சொல்லும் இந்த பொய்யானது அது ஒரு வகையில் நீங்கள் உங்களை நம்பியவருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்...!!!!!!!!!!! எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது என்று பேச்சு பழக்கத்தில் உண்டு....!!!!!!!!!!!! அந்த மாதிரி ஒரு நிலை நமக்கும் நாம் உயிராய் நேசிக்கும் உறவுக்கும் வர வேண்டுமா?????

நேசிப்பவருக்கும் நெருக்கமாய் இருப்பவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஆனால் நெருக்கமாய் நேசிப்பவர்களை வெறுக்காமல் இருக்க இந்த விளையாட்டாய் சொல்லும் பொய்களை தவிர்ப்போமே!!!!!!!!!!!!!

பொய்ய்யான இந்த உலகவாழ்வில் உண்மையாக வாழ்வோமே!!!!!!!!!

வியாழன், 12 டிசம்பர், 2013

ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!


ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!

இந்த ஊடகங்களை பற்றி பல முறை நான் எழுதியுள்ளேன் இவர்கள் தங்களின் TRP யை ஏற்றிக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று அதற்க்கு மிக அருமையான உதாரணம் சமீபத்திய சிங்கபூர் கலவரம்!!!!!!!!

இதில் ஒருத்தன் குடிபோதையில் போயி பஸ்ஸில் விழுந்து இறந்துவிட்டான் இதற்க்கு இவர்கள் (நம் தமிழர்கள்) செய்தது தேவையற்ற செயல் மேலும் கண்டிக்கதக்கது, இவர்களின் போதைக்கு ஊருகாயாக 27 தமிழர்கள் சிறையில் இதில் அப்பாவிகள் எத்தனை பேர் என்று தெரியவில்லை, அவர்களுக்கு எனது அனுதாபங்கள்!!!!!

நடந்தது இப்படி இருக்க இந்த ஊடகங்களோ ஏதோ நேரில் சென்று பார்த்தது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றது என்பதை சிங்கபூர் முகநூல் வாசிகள் மூலம் அறியலாம்!!!!!!!!!! ஆனால் பாருங்கள் இதுவரைக்கு இந்தியாவில் குண்டுவெடிக்கும் போதெல்லாம் இந்த ஊடகங்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடமே இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சுமத்தி தனது விபச்சார தொழிலை செய்துவிடும் அப்போதெல்லாம் யாரும் முகநூலில் இந்த ஊடகங்களை குறை சொல்லவில்லை, இப்பொழுது அவர்கள் வசிக்கும் நாட்டில் நடந்ததை பற்றி தவறாக சித்தரிக்கும் போது பொங்கி எழுகிறார்கள்!!!!!!!! நான் அனைவரையும் சொல்லவில்லை!!!!!!

உங்களுக்கு வந்தா ரத்தம்!!!!!!!! இஸ்லாமியர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???????? மனிதர்கள் பெருகும் அதே நேரத்தில் மனிதாபிமான கொன்று புதைக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை!!!!!!!!!!!

மேலும் இன்று சிங்கபூர் சிறையில் இருக்கும் அந்த 27 பேர்களின் குடும்பத்தின் நிலை???????????? மிகப்பெரிய கேள்விக்குறியாகயுள்ளது!!!!!!!

நம்முடைய கோபம் சரியான காரமில்லாமல் வீண்போகக்கூடாது!!!!!!!!!!!!!! ஆனால் இது தேவையில்லாத கோபம், போதையால் வந்த கொடூரம்!!!!!! கூடி குடியை மட்டுமில்லை ஒரு சமுதாயத்தை அழிக்கும்!!!!!!!! இனி அந்த அரசாங்கம் நமது தமிழர்களுக்கு விசா குடுக்க கெடுபிடிகளை அதிகரித்தல் ஆச்சரியபடுவதர்க்கில்லை!!!!!!!!!!!

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இதுவரை நான் எழுதிய முகநூல் வாசகங்கள் சில ...!!!!!!!!!!!!!!!!


  1. பொய்களால் தடவிக்குடுப்பவர்களை விட உண்மையால் அரைபவர்களைதான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும். 
  2. நமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை ஏன் நாம் போட்டு கஷ்டபடுத்திக்கொல்கிறோம். 
  3. எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் கடைசியில் கைநாட்டுத்தான் பாதுக்காப்பானது. 
  4. நாம எடுக்குற முடிவுல அடுத்தவங்க சந்தோசப்பட்டால் அதுவும் நமக்கு சந்தோஷம்தான். 
  5. வாழ்க்கை ஒன்றும் ரிமோட் கன்ட்ரோல் இல்லை இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ள நாமதான் எழுந்திருச்சி மாற்றிக்கொள்ளனும்.
  6. மக்கள்தொகை அதிகாரிக்கும் அதே நேரத்தில் மனித நேயம் கேள்விக்குறியாய் நிற்கிறது. 
  7. மறுத்துவார்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் உயிரை நிரந்தரமாக காப்பாற்ற முடியாது, மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது, அவர்களும் ஒரு நாள் மரணிப்பவர்களே, எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். 
  8. வாழ்க்கையை பற்றி பெரிதும் கவலை படாதீர்கள் எப்படியும் நீங்க அதிலிருந்து தப்பா போவதில்லை. 
  9. கைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தும் குற்றவாளிகள், வெளிநாட்டில் வாழும் தியாகிகள் 
  10. அடுத்தவர்கள் சுயலாபத்திர்க்காக உன் சுய நலத்தை விட்டால் அப்ப நீதான் இந்த உலகத்தில் ரொம்ப நல்லவன். 
  11. பொண்ணுக்கும் டீ கடையில் தொங்குற பண்ணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, ரெண்டுமே மூடாம இருந்தா கேட்டு போயிடும்.
  12. பொண்ணு பார்க்க புகைப்படம் தர மறுக்கும் சமுதாயம்தான் ஸ்டூடியோவில் வளைந்து வளைந்து எடுக்க அனுமதிக்கிறது 
  13. கருத்து என்பது நம்ம கய்யில் கட்டிருக்கிற வாட்ச் மாதிரி ஒவ்வாறுத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும் ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க 
  14. வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.