OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 22 அக்டோபர், 2012

விளம்பரங்களில் வக்கிரங்கள்!!!!



இன்றைய காலத்தில் ஒரு பொருளை நீங்க விற்க்கவேண்டுமென்றால் அதற்க்கு ஒரு மிக பெரிய விளம்பரம் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும் விளம்பரம் மக்களிடையே பிரபலமானால்தான் நமக்கு லாபம் கிடைக்கும். ஆனால் அந்த விளம்பரம் என்ற உடன்  அந்த சமயத்தில் தான் விளம்பர கன்சல்டண்ட்ன்னு சொல்லி ஒருத்தன் வருவான் (ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா!!!) அப்படின்னு சொல்லி ஒரு தொகையை ஆட்டையை போட்டுடுவான். சரி நாம விஸ்யாதுக்கு வருவோம்.



இப்படி ஒளிபரப்ப படுகின்ற விளம்பரங்கள் மக்களின் இப்படி எடுக்கிற விளம்பரம் மக்கள்ட்ட சென்றடையனும்கிறதுதான் முக்கியம், அதுல பெருசா சமூக அக்கறை உள்ள விஷயமா கொண்டு போய் சேர்க்கனும்கிறதுல்லாம் முக்கியமில்லை. சரி அதெப்படி அவன் காசு போட்டு எடுக்கிற விளம்பரத்துல சமூக கருத்தை சொல்லனும்னு நீங்கள் எதிர்ப்பார்க்கிறீங்கன்னு கேட்கலாம். அட சமூக கருத்தை சொல்ல வேண்டாம்பா, சமூகமே கூச்சப்படும் அளவுக்காவது விளம்பரங்கள் இல்லாமல் இருந்தா அதுவே சமூக சேவை மாதிரிதான். 

திங்கள், 15 அக்டோபர், 2012

தமீழக மக்களுக்கு தேவை மாற்றான் அல்ல மாற்றம்



சமீபகாலமாய் பதிவு எழுதவென்பதில் ஆர்வமற்ருப் போயிருந்தேன். எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளைப் படித்துவிட்டு நகர்ந்துவிடவேண்டும். பாம்புக்குப் பல் விளக்கிப் பார்க்கும் பதிவுகளை எழுதும் திறமையும் நோக்கமும் எனக்கில்லை. எனவே என் தளத்தை மூடிவிட்டு போய்விடலாம் என்று கூட யோசித்தேன்.  அதுதான் பதிவெழுதுவதில் இந்த கால இடைவெளி.

தற்போது என் திருப்திக்காகவேனும் எழுதவேண்டிய தேவையும், நிமித்தமும் இது தான். பொதுவாகவே இப்போதெல்லாம் மின்வெட்டு பிரச்சனையின் களம் பெரும்பாலும் எல்லை தாண்டி நகர்ந்துவிட்டது. இன்று பல சமூக வலைதளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் அதிகமாக கேலி செய்யப்படுவது, நம்ம நடிகர் விஜய், பவர் ஸ்டார், இந்திய கேப்டன் விஜயகாந்த் போன்றவர்களை மிஞ்ச்சிவிட்டது இந்த மின்வெட்டு காமெடிதான். அதனால் இந்த மின்சாரத்தை பற்றிகூட எனக்கு எழுத தோணவில்லை, அப்படியே நான் விலாவாரியாக விளக்கினாலும் அதில் அக்கறைகொண்டு படிக்கும் தேவை என்பது அருகிவிட்டது இந்த மின்வெட்டு விடயத்தில். 

புதன், 3 அக்டோபர், 2012

இது தேவையா?


20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்



நேற்று நடந்த வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா அணி தனது வாழ்வை இழந்து, தனது அண்டை (சண்டை) நாடான பாகிஸ்தானை அறை இறுதிபோட்டிக்கு அனுப்பியுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்கவை 121 ரன்களுக்குள் காட்டுபடுத்த தவறியதால் இந்தியா அணி அறை இறுதி வாய்ப்பை கைவிட்டது.

இந்த முறை தோனியின், பாச்சா பலிக்கவில்லை ஏன்? வீரர்களை நம்பாமல் ஜோசியத்தை நம்பி, உலககோப்பையை வென்ற அனிதான் வெற்றிபெறும் என்ற தலைகனத்தில் போனால் இப்படிதான் நடக்கும், இந்த உலககோப்பை ஆரம்பிக்கும்போது கபில் தேவ் சொன்னது இதுதான், ராசி பார்த்து தனது அணியின் உடையை மாற்றாமல் விளையாடின நம்ம தோனியின் அறிவை என்னவென்று சொல்வது. இதில் பாதிப்பேர் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் விளையாடி பார்க்கவே இல்லை, அப்படி இருக்கும் போது எப்படி ராசி செல்லுபடியாகும் இது என்ன மாங்காத்த விளையாட்டா?.

எப்போதும் கூல் கூல் என்று எல்லோரோலும் வருணிக்க கூடிய நம்ம தலை தொனியுடைய கூல் முகத்தை நீங்க பார்க்கணும் (கீளே):-

இது தேவையா?




இந்த உலககோப்பை ஆரம்பம் முதல் பார்த்தாலே தெரிந்துவிடும் நம்ம BCC அணியின் லட்சணம். ஏதோ கடமைக்கு விளையாடுறாங்க, இதே ipl ஆக மட்டும் இருக்கட்டும் சும்மா சுத்தி சுத்தி அடிப்பாங்க!!!!!!!!!!!!!!!!! இதை எல்லாம் எழுதுறதுக்கே அசிங்கமா இருக்கு. என்ன பண்ணித்தொலைய!!!! நாமளும் பிளாக் வைத்துள்ளோமே.

இன்று அறை இறுதியில் நுழைந்த நான்கு அணிகளும் இது வரை மிக சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள், நம்ம ஆளுங்க கொஞ்சம் கூட கஷ்டடபடாம ராசி பார்த்து வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்றைக்குமே உழைப்புதான் கைகொடுக்கும், இதை யார் தோனிக்கு புரியவைப்பது.