OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வெளிநாட்டு வாழ்க்கை வரமா? சாபமா?


வெளிநாட்டு வாழ்க்கை என்பது இந்தியர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமில்லை, இது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்க்கு போய் வசித்தல், வேலை செய்தல். ஆனால் இதில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியர்களாகிய நாம் எவ்வாறு வேறுபடுகிறோம் என்பதில்தான் வித்தியாசம் உள்ளது. பொதுவாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அதிலும் அதிகமானோர் படிபறிவில்லாத்வர்கள். இதில் வேலைவாய்ப்புக்கான போட்டிகள் அதிகம்.



வியாழன், 20 செப்டம்பர், 2012

உட்கார்ந்து யோசிச்சது







வித்தியாசம்:-
மனிதனுக்கும், மொபைலுக்கும் சின்ன வித்தியாசம்தான்???
மனிதனுக்கு கால் இல்லைனா பேலன்ஸ் பண்ண முடியாது!
மொபைல்ல பேலன்ஸ் இல்லைனா கால் பண்ண முடியாது!!!

நோட்புக்கிர்க்கும், ஃபேஸ்புக்கிர்க்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்,
நோடெபுக்குள டீச்சர் மட்டும்தான் கரெக்ட் பண்ண முடியும், ஆனால் ஃபேஸ்பூக்குள டீச்சரையே கரெக்ட் பண்ணலாம்!!!!!!!!!!!!!!!!

அழகான பொண்ணு:-
அழகான பொண்ணுங்க எப்பவுமே ஒல்லியாதான் இருப்பாங்க, ஏன் தெரியுமா? பாய்பிரெண்ட் காசுல சாபுட்டா உடம்புல ஓடாது!!!!

எல்கேஜி பாய்ஸ் நக்கல்:-
பாய் 1:- மச்சான் என் லவ்வர் சுமோக் பண்ணா கேன்சர் வரும்னு சொல்றாடா !
பாய் 2:- மச்சி அவ போயி சொல்றாடா, சுமோக் பண்ண புகைதான் வரும்.

புலிகேசி:-
ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?
மந்திரி: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
ராஜா: அடேய்மங்குனி மந்திரியாரே நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...! கக்கக்காகிக்குக்கா
மந்திரி: அதைத்தான் சொல்லீட்டான் மாங்கா மன்னா ...!

சந்தானம் சங்கம்:-
மிஸ்டு கால் குடுக்குற பொண்ணுங்களை விட, ஒண்ணுமில்லாத sms அனுப்புர பிரெண்ட் பெஸ்ட்.

நம்பிக்கை :-
கழுதை:- என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்.
நாய்:- அப்பா எங்கேயாவது ஓடிபோக வேண்டியதுதானே?
கழுதை:- அபப்டிதான் நினைத்தேன் ஆனா, முதலாளி அவன் பொண்ணு எப்ப மார்க் சரியாக வாங்கினாலும் கழுதைக்குதான் கட்டிவைப்பேன் என்று சொல்கிறான் அதான் கொஞ்சம் வெயிட் பண்றேன். (நம்பிக்கை தான் வாழ்க்கை).

ஒரு மெசேஜ்:-
“இந்த உலகத்தில் உன்னை ஒதுக்க யாருமே இல்லை, ஏன் உன் எதிரிக்கு கூட நீ வேண்டும் உன் கூட சண்டை போடுவதற்க்கு, எனவே வாழ்க்கை அற்புதமானது, அதை பாசிடிவா தொடங்கு”.

ஒரு மொக்கை:-
எலி சாப்ட்டு மிச்சம் வைத்த சாதம் என்ன தெரியுமா?

தெரியலையா??

அதாங்க, “எலிமிச்ச சாதம்“

வாழ்க்கை தத்துவம்:-
1.   Unity இல்லாதவன் கூட வேணும்னா வாதம் பண்ணலாம், ஆனால் “maturityஇல்லாதவன் கூட வேதம் கூட ஓத கூடாது.
2.   நாம் கூறுகின்ற கருத்து என்பது நம்ம கையில் கட்டிக்கிற வாட்ச் மாதிரி, ஒவ்வொருதருக்கு ஒரு விதமாதான் மணி காட்டும், ஆனா எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க.
கணவன் மனைவி ஜோக்:-
மனைவி:- எங்க சொர்காத்துல கணவன் மனைவி சேர்ந்திருக்க முடியாதாமே?
கணவன்:- அதனாலதான் அதுக்கு பேர் சொர்கம்!!!!!!!!!!!!!!!!

மனைவி (போனில்):- என்னங்க இன்னைக்கு ரசம் வைக்கவா, இல்ல கொழம்பு வைக்கவா?
கணவன்:- முதல்ல எதையாவது வை, அப்புறம் பேர் வைக்கலாம்!!!

ஒரு பொண்ணு ரோட்ல தனியா வரா, அப்ப
ரவுடி: என்னமா இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டே...
பொண்ணு:- கண்ணா பொண்ணுங்கதான் கூட்டமா வரும், ஐட்டம் சிங்கிலாதான் வரும்.


இறுதியாக நம்ம தமிழ் சினேமாவை பற்றி:-



தமிழ் சினேமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதாங்க,

கில்லின்னு சொன்னாங்க படத்துல ஹீரோ கபடி ஆடுறார். போக்கிரின்னு சொன்னாங்க ஆனா போலீசா இருக்காரு, அழகிய டமிழ்மகண்ணு சொன்னாங்க கடைசிவரைக்கும் அது யாருன்னு காட்டவே இல்லை, இதுகூட பரவாயில்லைங்க குருவிண்ணு சொன்னாங்க தேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை, சரி வேட்டைக்காரன்னு பார்த்த ஆட்டோக்காரனா வரார், சுரான்னு சொல்லிட்டு கருவாட்ட காட்டுராங்க...............!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாத்தியமா சொல்ல்ரெங்க நான் விஜயை கிண்டல் பண்ணலையே……!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எங்கே போனார்கள் பதிவர்கள் எல்லாம்?



ஏதோ ஒரு இஸ்லாமிய பதிவர், தங்கள் லீலைகளை எல்லாம் சிரிப்பாக சிரிக்க வைத்து விட்டார் என்று கொஞ்ச நாளைக்கு முன்னர் குதியோ குதி என்று குத்தித்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்!!!!!!!!!!!!!!!!

இன்று அதே ஒரு இஸ்லாமிய சமூகத்தின் உயிரினும் மேலான ஒருத்தரை கேவலப்படுத்தி ஒருத்தன் சினிமா எடுத்துள்ளானே. அதுகுறித்து ஏதாவது ஒருத்தர் எதிர்ப்பை காட்டவில்லையே ஏன்? நாம் ஏன் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்?
இதே ஒரு நடிகனுக்கு ஏதாவது ஒன்று என்றால், அந்த வாரம் முழுவதும் அதுதான் அவர்கள் வலைபூக்களில் செய்தி, அந்த நடிகை அவருடன் இருந்தார், இவருடன் இருந்தார் என்றுதான் உங்கள் பதிவுகள் தொடர்கின்றன. அப்ப அப்ப சில நல்ல செய்திகள். தமிழர்கள் கொல்லப்பட்டால் இவர்களுக்கு பயங்கர குஷிதான், ஏன் தெரியும் அதை வைத்து ஒரு வாரத்தை ஒட்டலாமே!!!!!!!!!!!! அப்படி ஒன்றுமில்லை என்றால் இருக்கவே இருக்கு சினிமா விமர்சனம். ஆளாளுக்கு ஆரம்பித்து விடுவார்கள் உலக சினிமா, உதவாகரை சினிமா என்று!!!!!!!!!!!!!

உங்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் எதிர்ப்புகளை காட்ட வேண்டாம், அந்த நாதாரி வெளியிட்டுள்ள படத்தை பார்த்து அதையும் உலக சினிமா என்று சொல்லி விடாதீர்கள்!!!!!!!!!!!!!!!! மேலும் அதனுடைய லிங்கை கூட வெளியிடாதீர்கள்.

நீங்கள் உலகிர்க்கு தெரியவேண்டும் என்பதர்க்காக எதையும் செய்ய துணியாதீர்கள்.

இவன்தான் அந்த பலபேருக்கு பொறந்த நாதாரி!!!!!!!!!!!!!!!!!!


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படம் எடுத்ததில் தொடர்புடைய Nakoula Basseley Nakoula என்பனை நேர்ணாகல் எடுத்த பிறகு லாஸ் ஏன்ஜல்ஸ் ஷெரிஃப் அலுவலக அதிகாரிகள் பத்திரிமாக அவனை ஒரு இடத்தில் இறக்கி சென்றுள்ளனர்.
இவன் தற்போது தலைமறைவாக உள்ளான். அதிகாரிகள் அவனை எங்கு இறக்கி விட்டார்கள் என்ற தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றது. அவன் தற்போது தனது வீட்டில் இல்லை. அவன் எங்கு உள்ளான் என்ற தகவல் அதிகாரிகளை தவிர யாருக்கும் தெரியாது.
அதிகாரிகளிடம் அவன் எங்கு உள்ளான் என கேட்டதற்கு அவரை நாங்கள் இறக்கி விட்டு விட்டோம் அவர் எங்கு சென்றார் என எங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

யப்பா டேய் இது உலக மகா நடிப்புடா!!!!!!!!!!! சாமி


சூர்யா இதுவரை நடித்த விளம்பர படங்களில் நடித்த காசெல்லாம் ஏழை மானவர்களின் படிபிர்க்காகதான் செலவிட்டாராம்!!!!!!!!!!!!!






இதை பத்தி நம்ம சினிமா காரர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம்:


கவுண்டர்மனி:- யப்பா டேய் இது உலக மகா நடிப்புடா!!!!!!!!!!! சாமி

வடிவேலு:- ஏண்டா இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு (என்னது அது அவிய்ங்க தலை எழுத்தா)

கமல்:- நாலு பேருக்கு நல்லதா செய்யணும்னா எதுவுமே தப்பில்லை, அப்டின்னு சொன்ன நானே இதுவரைக்கும் எவனுக்கும் எதுவுமே செய்யலை, சத்தியாமா சொல்ரென்றடா நீதான் டா அடுத்த உலக நாயகன்.

விஜயகாந்த்:- தம்பி ஓசில கூட என் படத்த பார்க்க எவனும் வார மாட்டேங்கிறான், அந்த நிலை உனக்கு வார கூடாது.

விஜய்:- டேய் வாழ்க்கை ஒரு வட்டம்டா, எங்கு சுத்துநாலும், காசுக்குதான்னு தெரியும், கோடிக்காக கேடி வேலை செஞ்சவந்தானே நீ .

அஜீத்:- காசுக்காக எனக்கு வந்த வாய்ப்பை எல்லாம் தட்டி பறித்த நாதாரி நீயெல்லாம் ஓசில படிப்பு தருவியா?. எலே இன்னொரு தடவை இந்த மாதிரி எல்லாம் பெட்டி குடுத்த, உடம்புல கையிருக்கும், காலிருக்கும் மூக்கிருக்கும் முழியிருக்கும், மவனே முழுசா (என்ன அவரு அரை தானா??)  

இதை எல்லாம் பார்த்த நம்ம சூர்யாவோட அப்பா கடைசியாக

சிவகுமார்:- டேய் உன்னை நான் என் புள்ளை மாதிரி வளர்த்தேனேடா? இப்படி ஒரு காரியத்தை எப்படி டா உனக்கு மனசு வந்தது...............


சனி, 8 செப்டம்பர், 2012

எந்த மனிதனும் 100% சதவிகிதம் நல்லவனா இருக்க முடியாது? இது எந்த அளவிற்க்கு உண்மை!!!!!!!!



உலகில் எவன் எந்த தப்பு செய்தாலும், அவனிர்க்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், இன்னும் சிலர் அவன் செய்த தப்பிற்க்கு காரணங்களை கூறி சமாளிப்பார்கள், அப்படி சமாளிப்பவர்கள் எல்லாம், இங்கே மேலே தலைப்பில் உள்ளதைதான் சொல்லுவார்கள் எவனும் 100% ஒழுங்கு கிடையாது”  

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இன்று ஒரு தகவல்



இன்று காலை கூகிள் வலைதளத்தை திறந்தேன், அதில் ஒரு அரபியர் வானத்தை நோக்கியாவரு போஸ் குடுத்து கொண்டு இருந்தார், வானத்தில் முழு நிலா வேற, நான் கூட என்னடா இது ஒரு வேலை நாம பிறைகளை பற்றி விளக்கி கொண்டு இருக்கிறோமே, இதுவும் அதை பற்றி ஏதாவது ஒரு விளக்கமாக இருக்குமா என்று பார்த்தால், அதில் இருப்பவர் ஒரு இஸ்லாமிய பண்டிதர்,



அவர் பெயர் அபு ரெய்ஹன் அல்-பிருணி, இவர் 973-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் தேதி காத் என்னும் ஊரில் பிறந்தார், இந்த ஊர் உஸ்பெகிஸ்தானில் உள்ளது. இவர் ஒரு சிறந்த இஸ்லாமிய பண்டிதர் மட்டுமில்லை, மேலும் வின்னியல், கணிதவியல், வரலாற்றுத்துறை போன்றவற்றில் மிக சிறந்தவர். இவர் சோரஸ்மீயன், பெர்ஷியன், அரபிக், சான்ஸ்கிரிட் மற்றும் கிரீக், ஹெப்ரூ மற்றும் சிரியாக்.
இவர் வாழ்க்கையின் அதிகமான காலங்களை இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள காஃஜ்ணி என்னும் ஊரிலே கழித்தார். 1017-ஆம் ஆண்டு இவர் இந்தியாவிர்க்கு வந்தார், இவர் இந்தியாவிர்க்கு வந்து inodlogy என்னும் ஒன்றை உருவாக்கினார் (அதாவது இந்தியா கலாச்சாரங்கள், மொழிகள், வரலாறுகள்).இவர் பூமி பற்றின அறிவியலிலின் தந்தை எனவும் கூறபடுகிறார்.

இறுதியில் இவர் 1048-ஆம் ஆண்டு டிசெம்பர் 13-ஆம் தேதி இயற்க்கை எய்தினார். 

திங்கள், 3 செப்டம்பர், 2012

நமது இறைநம்பிக்கை எதனடிபடையில் அமையவேண்டும்



இன்று உலகளவில் முஸ்லிம்களிடம் ஒரு புதிய பழக்கம் தொற்றிக்கொண்டு இருக்கின்றது, அதாவது உலகில் ஏதாவது ஓரிடத்தில் முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கபடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உதாரணம் பர்மா, அதுக்கு பிறகு சில நாட்களில் அங்கே ஒரு பெரிய இயற்க்கை பேரழிவு நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள், உடனே நம் மக்கள் அவர்கள் வைத்திருக்கும், வலைதளத்திலும், ஈமைல்களிலும், முகப்புத்தகத்தில்  எழுதுகிறார்கள் இது அல்லாஹ்வின் தண்டனை என்று புழம்பி தள்ளுகிறார்கள், இதுதான் நாம் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள நம்பிக்கையா இப்படிதான் நம்பிக்கை வைக்க அல்லாஹ் நமக்கு கற்றுக்குடுத்தானா?


சரி பர்மாவில் கொன்றவளுக்கு தண்டனையாக பெரும் வெள்ளம் வந்தது என்று இவர்களின் கருத்துப்படி வைத்து கொள்வோம், இவர்கள் நோன்பு நோற்று துவா செய்தார்களாம், அதனால இந்த அழிவு வந்ததாம். சரி அப்படியே இருக்கட்டும், என்னுடைய கேள்வி? உலகில் பர்மாவில் மட்டும்தான் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்களா? ஏன் பாலேஸ்தீனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இன்னும் பல நாடுகள் இருக்கின்றது அங்கேயெல்லாம் கொல்லப்படவில்லையா? இல்லை அவர்களுக்கு இவர்கள் துவா செய்ய மறந்துவிட்டார்களா? இதுவா நாம் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை!!!!!!!!!!! நீங்கள் கேட்டவுடன் குடுக்க் அல்லாஹ் என்ன இன்ஸ்டண்ட் நூடுல்ஸா ???? நம்முடைய துவாக்களுக்கு நிச்சயம் பதிலளிப்பான் ஆனால் அது எதுவென்று நாம் அறியமுடியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னுமொரு செய்தி, சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தி முகப்புத்தகத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்கள் பெற்றது, அதாவது ஒருவர் இறந்துவிட்டார், அவரை அடக்கம் பண்ணிவிட்டு வந்துவிட்டார்களாம், மூன்று தினங்களுக்கு பிறகு இர்னதாவரின் தந்தைக்கு சந்தேகம் தொண்டி பார்த்தால் அந்த மைய்யத் மிக கொடூரமாகவும், கண்கள் எல்லாம் விரிந்து காணப்பட்டதாம், இதையும் நம்பி சில முஸ்லிம்கள் அதற்க்கு ஹிட்களும், கமெண்ட்ஸ் களும் குடுக்கிறார்கள், இதுவா நம்முடைய ஈமான்?

மண்ணறையில் வேதனை உண்டுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அந்த வேதனை ஒரு சாதாரண மனிதனால் எப்படி பார்க்க முடியும், அந்த மண்ணறை வாழ்க்கை என்பதன் நியானம் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும் இதை பற்றி நாம் சிந்திக்க கூட கூடாது, நம்பதான் வேண்டுமே தவிர!!!!!!!!! அதுதான் நமது ஈமானை பாதுகாக்கும்,

இதை இறைவன் அழகான முறையில் தனது திருமறையில் கூறுகின்றான்:-
“அவன் மறைவானதை அறிபவன், தனது மறைவான விஷயங்களை அவனை பொருந்திக்கொண்ட தூதரை தவிர வேற யாருக்கும் வெளிபடுத்த மாட்டான்” 72:26.

எனவே இதுவெல்லாம் யூத கிறிஸ்துவர்களின் வழி, அவர்கள்தான் குருடனையோ, அல்லது குஷ்டமுள்ளவனையோ செட் செய்துவிட்டு கூட்டத்தில் கர்த்தரிடம் பிராத்திப்பார்கள் உடன் அந்த குருடனோ அல்லது குஷ்டரோகியோ குன்மாவது போல காட்டி அவரகளை தான் மாதத்தின் பால் இழுப்பார்கள், இது போல ஒரு கேடுகெட்ட நிலைமை நமக்கு தேவையில்லை,

நமக்கு அல்லாஹ்வின் வேதமும் அவனின் தூதரின் வழிக்கட்டுதலுமே போதும், மேலும் இன்று அல்லாஹ் உதவியால் பெரும்பாலான் மக்கள் இஸ்லாத்தின் பால் வருகின்றார்கள், அவற்றை எல்லாம் இது போன்ற செய்திகளால், பின்னடைய செய்துவிடாதீர்கள்,

இன்னும் ஒரு முக்கியமான, செய்தி அதுவும் முகப்புத்தகதில் தான், அதாவது ஐ love அல்லாஹ், i love முஹம்மத் போன்ற படங்களை போட்டு இதை ஷேர் பண்ணினால் இத்தனை நன்மை வரும், அது நடக்கும், இது நடக்கும் போன்றவற்றை முற்றிலும் நிறுத்தி விடுங்கள், இதுவும் நமது ஈமானை பலவீனமாக்கிவிடும்.

மேலும் ஒரு இறைவாசனம் கூறி முடித்துக்கொள்கிறேன்

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறையில் அஞ்சிக்கொள்ளுங்கள், முஸ்லிமாக தவிர மரணிக்காதீர்கள” 

பெட்ரமாஸ் லைட்டெதான் வேணுமா?


(Xtouch X401, Samsung Galaxy S-II எது சிறந்தது?)



சமீபமாக அமீரகத்தில் xtouch என்கின்ற நிறுவனத்தாரின் டாப்லெட்கள் அதிகம்பேரை கவர்ந்துள்ளது. அதற்க்கு காரணம் என்னவென்று பார்த்தால் குறைந்தவிலையில் சிறந்த தொழிற்நுட்ப்பத்தில் கிடைப்பதால், எல்லோரும் 1500, 2000 திர்காம்ஸ் என்று செலவழித்து வாங்கும் காலக்ஸி டாபில் நீங்கள் என்ன என்னவெல்லாம் செய்கிறீர்களோ? அதையே இதிலும் நீங்கள் செய்யலாம். இவர்களின் 7” tablet வெறும் 260 திர்காம்ஸ் தான் என்றாள் உங்களால் நம்பமுடிகிறதா. இது ஒரு சீன உற்பத்திதான், இருந்தாலும் நல்ல பேரு வாங்கிய நிறுவனங்கள்தான் தரமான பொருளை தரமுடியும் என்று மக்களே உருவாக்கி கொண்ட விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை.  

என்னடா இவன் தலைப்பிற்க்கும், இந்த கிறுக்கல்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று பார்க்கிறீர்களா? அடுத்து அதுக்குதான் வரேன், மேலே சொன்னது போல இவர்களின் நிறுவனத்தில் இருந்து மேலும் இரண்டு புதிய போன்களை அறிமுக செய்துள்ளன, ஒன்று X401, மற்றொன்று X506, இதில் முதலில் உள்ளது 4.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது மற்றொன்று 5 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது, இதில் என்னவோரு முக்கியமான விஷயம் அப்படினா? சாம்சங் காலக்ஸிகளை காட்டிலும் விலை மிகவும் குறைவு, அதே நேரம் இவர்களின் தொழில்நுட்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை, ஒரு சில சிறிய மாற்றங்களை தவிர உதாரணதீர்க்கு கீழே உள்ள இரண்டு ஒப்பீடுகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், நான் போன வாரம்தான் ஒன்று வாங்கினேன், கடிப்பாக இது ஒரு சிறந்த தேர்வு, விலை அதிகமாக போட்டு வாங்குவதற்க்கு இந்த மொபைல் சிறந்தது, இதன் விலையோ வெறும் 500 முதல் 600 திர்காம்ஸ் வரைதான். புத்திசாலிகள் புரிந்துகொள்வார்கள்:-