OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 29 ஜூலை, 2012

திப்பு சுல்தான், இதுவரை நீங்கள் அறியாதது


Worlds First War Rocket deployed in 1792 by India "Tipu Sultan"

நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் கட்டுரை நீளமாக இருக்கிறது என்று அரை குறையாக படித்து விட்டு விடாதிர்கள் முழுமையாக படித்து மறைக்கபடுகின்ற வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்து கூறுங்கள் . 


திப்பு சுல்தான், நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு மாவீரன், ஆனால் இந்த பதிவில், இதுவரை நீங்கள் அறியாத ஒரு திப்பு சுல்தானை பற்றி நான் கூறபோகின்றேன்



1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும். 

வியாழன், 26 ஜூலை, 2012

குடும்பத்து குத்துவிளக்குகள் இப்படி செய்யலாமா?


பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.

ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.

ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில் பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வஇயுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

''நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (அல்குர்ஆன் 33:32)

அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்? அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி!



உட்பொதிக்கும் படங்கள் 1
நான்கு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம், வெள்ளையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயி, தன் குடும்பத் தேவைக்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்றார். மகள்களின் திருமணச் செலவும் மகனின் படிப்புச் செலவும் போக கையில் சுமார் 2 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைக் கொண்டு அரை ஏக்கர் நிலத்தில் ஏதேனும்  தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
 இந்நேரத்தில் பத்திரிக்கைகளில் ஈமு கோழியைப் பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து முட்டை உற்பத்தி செய்து கொடுத்தால், முட்டை ஒன்றை 2000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம் என்று அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்து. அந்த விளம்பரத்தைப் பற்றி  அக்கம் பக்கத்தில் விசாரித்து நம்பிக்கை பெற்ற மாணிக்கம், 2 லட்ச ரூபாயை ஈமு கோழி வளர்ப்பில்  முதலீடு செய்தார். ஈமு கோழிகளும் வளர்ந்தன. முட்டையும் இட்டன. ஆனால், இப்பொழுது 1000 ரூபாய்க்குக்கூட முட்டை வாங்க ஆளில்லை. வெளியிலும் விற்க முடியவில்லை. ஈமுவுக்குத் தீவனம் போட்டே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடனாளியாகியிருக்கிறார். இன்று இவரைப் போல நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈமு கோழிப் பண்ணை அமைத்துக் கடனாளியாகி நிற்கிறார்கள்.
விவசாயத்தில் இடுபொருட்களின் கிடுகிடு விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, நிச்சயமற்ற பருவ காலங்கள், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் நிச்சயமற்ற விலை, இவற்றால் தொடர் நட்டம் முதலானவற்றின் காரணமாக விவசாயிகள் நொடிந்து போயுள்ளனர். விவசாயம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று கருதிப் பலரும் மாற்றுத் தொழிலைத் தேட நிர்பந்திக்கப்படுகின்றனர். இப்படி நடுத்தர சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட பின்னணியில், ஈமு பண்ணை முதலாளிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகளை ஏய்த்துக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சுசி பார்ம்ஸ் முதற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஈமு நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றன. "ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செலவில் கோழிகளுக்கான கொட்டகை போட்டு அதில் ஆறு குஞ்சுகள் விடப்படும்; அதற்கான தீவனமும் வழங்கப்படும்; ஈமு கோழி வளர்ப்புக்கு  மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000  வரை கொடுக்கப்படும்' என்றும், "கோழிகளுக்கு இரண்டு வயதாகி முட்டை யிடும் தருவாயில் கோழியை எடுத்துக்கொண்டு, முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தருவோம்' என்றும் இந் நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றன.

வியாழன், 19 ஜூலை, 2012

ஏன் முஸ்லிம் என்றால் மட்டும், ஒதுங்குகின்றீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!


 
தலைப்பை பார்த்து நீங்கள் ஆத்திரப்பட்டால் அதற்க்கு நான் பொறுப்பு கிடையாது, உங்களிடம் பொறுப்பில்லை என்பதே அர்த்தம். என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் எல்லா உயிரும் விலை மதிப்பில்லாதது தான். 

ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்கு மிக மிக முக்கியமானவர்தான். உயிர்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லைதான். ஆனால் இன்று இந்த உலகில் அரசாங்க பதவியில் இருப்பவர்கள்எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டியவர்கள் மனித உயிர்களுக்கு மத்தியில் வித்தியாசத்தை உண்டு பண்ணிபாரபட்சமாக நடந்து கொள்வதுதான் வேதனையாக உள்ளது.
எல்லோரையும் போலத்தான் முஸ்லிமும் அவர்கள் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை  செலுத்துகிறார்கள். அரசாங்க விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சட்டத்தை மதிக்கின்றார்கள்  எதிலுமே வித்தியாசம் காட்டுவதில்லை. ஆனால் நம் விஷயத்தில் இந்த உலகமே ????????????

இந்த உலகில் தினமும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோஇந்த உலகில் எங்கோ ஒரு முஸ்லிம் சமுதாயமே அழிக்கபடுகின்றது என்பதுதான் நிதர்சன உண்மை. ஏன் இந்த கருவருப்பு. என் முஸ்லிம் சமுதாயம் அப்படி என்ன துரோகம் செய்தது இந்த உலகிற்க்கு? உலகை என்னவென்று அறிந்து கொல்லாமலே கொல்லபடும் என் முஸ்லிம் பிஞ்சுக்கள் என்ன பாவம் செய்தது??? நீங்கள் (மாற்று சமுதாயத்தவர்களே)  உங்கள் பிஞ்சு குழந்தைகளை அள்ளி கொஞ்சும் அந்த கணத்தில் என் சமுதாய மக்கள் கொன்று போட்ட பிஞ்சுக்களை அள்ளி கதறுகிறார்களே ஏன் இந்த பாரபட்சம்? ஐம்பது வயதில் கணவனை இழந்து நின்றாலே தாங்க முடியாமல் கதறும் நீங்கள் எங்கே, கன்னிகழியாமலே இறந்து போகும் எனது சமுதாய சகோதரி எங்கே??????????? தொலைகாட்சியில் வரும் அசிங்கங்களையே பார்க்க முடியாமல் வேறு ஒரு சேனல் மாற்றும் நீங்கள் எங்கே, தன் கண் முன்னே தன் தாய்/மனைவி/மகள் என்று பாரபட்சமில்லாமல் கற்பழிக்கபடுவதை பார்க்கும் என் சமுதாய சகோதரன் எங்கே????????

உலகில் ஒரு நாய்யை கொன்றால் கூட கேட்பதற்க்கு என்று ஒரு அமைப்பு இருக்கு, ஆனால் என் சமுதாயத்திர்க்காக குரல் குடுப்பதற்க்கு உங்களுக்கு ஏன் தோன்றவில்லை. ஓ அதுதான் மனித உரிமை காக்க ஒரு அமைப்பு இருக்கிறதே என்கின்றீர்களா? பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் யாராவது கொலை குற்றவாளிகள் இருந்தால் அவர்களை தப்பிக்க வைப்பதிலேயேதான் குறியாக உள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்தியன் அடிவாங்கினாலே, இந்திய அரசாங்கம் பதறுகிறது, இங்கே ஆயிரம் போராட்டங்கள் நடக்கின்றது, இலங்கையில் ஒரு தமிழன் (தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் கிடையாது) கொல்லப்பட்டால் இங்கு தமிழகத்தில் உள்ள சில சீமான்கள் பல வீர வசனங்கள் பேசுகின்றார்கள். ஆனால் என் சமுதாயம் எங்காவது கொல்லப்பட்டால் மட்டும் கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கின்றார்கள். அதர்க்காக நான் சீமான்களை அழைக்கவில்லை.

சாதாரண மக்களாகிய உங்களை கேட்கிறேன், உங்கள் வீடுகளுக்கு பக்கத்தில் இஸ்லாமியன் யாரையும் நீங்கள் பார்ததில்லையா? அவர்கள் எப்படி உங்களுடன் பழுகுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? வருடா வருடம் வெறும் நோன்பு கஞ்சி வாங்கி குடிக்கும் போதுதான் உங்களுக்கு முஸ்லிமை தெரிகின்றதா???? வெறும் செய்திதாள்களிலும், தொலைக்காட்சியிலும் தீவிரவாதியாக சித்தரிக்கபடும் ஒரு போலி முஸ்லிமை அப்படியே நம்புகின்றீர்களே உண்மையிலேயே நீங்கள் சோற்றில் உப்பு போட்டுதான் சாபிடுகின்றீர்களா?

இன்று உலகின் ராஜா என்று கூறி கொண்டு திரியும் அமெரிக்கா கொன்று குவித்த என் சமுதாயங்கள் எண்ணிக்கையில் அடங்க்காதவைகள், இருந்தும் அவர்களின் வெறி அடங்கிய பாடில்லை. ஏன் இன்று இலங்கையில் தமிழர்களை அழித்துவிட்டார்கள் என்று கொதிக்கும் சீமான்களே, உங்களுக்கு தெரியுமா அவர்களும் எனது சமுதாயத்தை வேரறுத்தவர்கள்தான்????????????

மேலும் இந்த பத்திர்க்கைகளை எடுத்துக்கொள்வோம், ஓரிரு தினங்களுக்கு முன் அமீரகத்தில் உள்ள துபாயில் இந்திய மீவர்களை சுட்டுவிட்டார்கள், அதை பற்றின செய்தி இந்தியாவில் அனைத்து செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அரங்கேறின, ஆனால் பாருங்கள் இந்தியாவை  ஒட்டி இருக்க கூடிய பர்மாவில் ஒரு இஸ்லாமிய சமுதாயமே வேரறுக்க படுகின்றது, அதை பற்றி இந்த ஊடக விபசாரம் செய்ய கூடிய ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. இது எந்த விதத்தில் நியாயம், எங்கே போனது உங்கள் மனித நேயம்.   

அமைதிதான் வாழ்க்கையில் முக்கியம் என்று போதித்த ஒருவரை பின்பற்றும் ஒரு சமுதாயம், செய்யும் காரியத்தை தட்டிக்கேட்க்காமல், அமைதி காப்பதிர்க்கு பெயர்தான் மனித நேயமா? இன்று வலைதளங்கள், வலைபூக்கள் வைத்திருக்கும் அன்பர்களே, உங்களில் பெரும்பாலானோர் (அனைவரையும் சொல்லவில்லை) சினிமா விமர்சனகளுக்கும், கள்ள காதல் செய்திகளுக்கும் குடுக்கும் முன்னுரிமையை இந்த செய்திகளுக்கு குடுக்காதது ஏன்??? நீங்களும் அமைதி காப்பது ஏன்???? உங்களில் ஏத்தினை பேர் இந்த முஸ்லிகளின் பிரியாணியை பெருமையாக எழுதி இருப்பீர்கள்???? பிரியாணிக்கு மட்டும்தான் முஸ்லிமா?

முஸ்லிமகள் அசைவம் சாபிடுகிறார்கள், ஆடு, கோழி மாடுகளை அறுத்து கொல்கிறார்கள் என்று புலம்பும் புண்ணியவாண்களே இன்று என் மக்களை கொன்று குவிக்கிறார்களே, இவர்கள் என்ன ஆடு மாடுகளை விட கேவலமானவர்களா? இல்லை நீங்கள் கேவலபட்டுவிடுவோம் என்கின்ற பயமா?

இந்த உலகின் தீண்டத்தாகதவர்களாக இஸ்லாமியர்கள் மாறிவருகிறார்கள் இல்லை இல்லை வாழத்தகாதவர்களாக இஸ்லாமியர்கள் மாறிவருகிறார்கள். இப்படித்தான் மற்றவர்கள் சொல்கிறார்கள் இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் நம்மில் சிலரின் முரட்டுத்தனமும் காரணமே

ஒரு சிலர் நம் சமுதாய மக்களுககு ஏற்படும் பின்விளைவுகளை யோசிப்பதே இலலை இஸ்லாத்திற்கும இஸ்லாமியர்களின் மீது அவர்களின் செயல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும யோசிப்பது இலலை.


புத்த தாய்லாந்தில் பட்டாணி முஸ்லிம்கள் கஷ்ட்ப்படுகிறார்கள்

புத்த இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் கஷ்ட்ப்படுகிறார்கள்

புத்த பர்மாவில் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்

அடிச்சா யாருன்னு கேட்க ஆளில்லாத அனாதைப் பய ........... என்ற நிலையில் நம் இஸ்லாமியச் சகோதரர்கள் பிணங்களாய்

இந்தப் படுகொலைகள் அனைத்திற்கும் காரணம் ஒரு புத்தப் பெண்ணை இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கற்பழித்தனர் என்று சொல்லப்படுகிறது.  (அந்த இளைஞர்கள் அனைவருக்கும் விரைவாக கேஸ நடத்தி முடித்து சில நாட்களுக்குள்ளாகவே மரண தண்டனையும வழங்கப்பட்டுவிட்டது).

ஒரு பெண்ணின் கற்பு அழிக்கப்பட்டதற்காக ஒர் இனமே அழிக்கப்படுகிறது. இந்தியாவில் தினமும் பல கற்பழிப்புகள் நடக்கின்றது, ஒரு ஹிந்து ஒரு பெண்ணை கற்பழித்தால் அந்த இனம் அழிக்கபடுவதில்லை, ஒரு கிருஸ்துவன் செய்தால் அந்த இனம் அழிக்கபடுவதில்லை.....................அப்புறம் என்ன மயிருக்கு என சமுதாயத்திர்க்கு மட்டும், எல்லா சமுதாயத்திலும் இது போன்றவர்கள் உண்டு, அதற்க்குரிய தண்டனையும் வழங்கியும் இது போல நடக்கின்றது என்றால்?????????????????

கேட்பதற்கு ஆளில்லாத அனாதைகளாக சிதைக்கப்படுகிறது.

இறைவா உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும தேடுகிறோம்


புதன், 18 ஜூலை, 2012

மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாதுஏன்?



தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) ஜவாஹிருல்லாஹ் போன்ற ஜால்ரா வாதிகள் போராடிவரும் வேளையில்தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்று ஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒருகருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய்வைத்துள்ளார் லகோதி.

செவ்வாய், 17 ஜூலை, 2012

தேனீக்கள் (Honey Bee)


உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.
தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony)நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள், வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை வரிசைப் படுத்தி காண்போம். 

திங்கள், 16 ஜூலை, 2012

புரிந்துகொள்ளும் நிலையில் தான் தமிழன் இல்லையே!

ரு தனியார் தொலைக்காட்சி ஒரு பிரபல்யமான ஒரு நடிகரை வைத்து ''மக்களை கோடீஸ்வரர் ஆக்கும்  நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் ஏதோ அந்த தொலைக்காட்சி அலல்து அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் தன்கைக்காசு ஒரு கோடியை மக்களுக்கு வாரி வழங்குவதாக நினைத்து ஏமாறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? 

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி [sms ]அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது.
அது போக அவர்களை தொடர்புகொள்ள சிள ஸ்பெஷல் நம்பர்கள் உள்ளன.  இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99
வரை சார்ஜ் செய்யபடுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 40 கோடிக்கு மேல் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வருமானம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதை நம் தமிழ் ஹீரோ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு வருமானம் 'சி'யில் கிடைக்கிறதல்லவா? அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை. இந்த நிகழ்ச்சியின் 37 பக்க  நிபந்தனைகளை (Terms & Conditions) (www.asknagravi.com/orukodi ) என்ற இணையதளத்தில் பார்த்தால் தமிழர்களை கோடீஸ்வரர்கள் ஆக்குகிறோம் என்ற பெயரில் கோவணாண்டிகளாக ஆக்கும் தந்திரத்தை விளங்கிக் கொளல்லாம்.

இன்னொரு செய்தி; சமீபத்தில் திருமணம் செய்த ஒரு சிரிப்பு புகழ் நடிகையும், அவருக்கு வாழ்வளித்த பிரசன்னமான நடிகரும் பிரிந்தது ஏன்? என்று பரபரப்பான போஸ்டர்கள் சென்னையைக் கலக்க, கூடப்பிறந்த அக்கா-தங்கச்சியை கட்டிட்டுப் போன புருஷன் விட்டுட்டு போயிட்டாக்கூட கவலைப்படாத நம்ம தமிழ் ரசிகன், தனது அபிமான சிரிப்பு நடிகைக்கும் அவரது கணவனுக்கும் பிரிவா என்று என்று கேட்டு கொதித்துப் போய் பலருக்கும் போன் போட்டு விசாரித்துள்ளனர். அதோடு பத்திரிக்கைகளுக்கும் போன் போட்டு இந்த நாட்டிற்கு முக்கியமான செய்தியை கேட்டுள்ளனர். பத்திரிக்கையளர்கள் சிலரும் கடமையே கண்ணாக அந்த பிரசன்னமான நடிகரிடம் இந்த போஸ்டர் குறித்து கேட்க, அவர் சொன்ன பதில்தான் செல்போன் நிறுவனங்களின் பகல் கொள்ளையை படம்போட்டு காட்டுகிறது. 

அதாவது புதுசா கல்யாணமான தம்பதிகளை ஆடி மாசம் பிரித்து வைக்கும் பழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. இதை மையமாக வைத்து யோசித்த ஒரு செல்போன் நிறுவனம், சிரிப்பு நடிகையும் அவரது கணவரும் பிரிந்ததற்கான காரணம் என்ன? என்று கேள்வி கேட்குமாம். அதற்கு ''ஆடி மாசம்' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அது சரியான பதிலாம். அதற்கு பரிசு வழங்கப்படுமாம். இதற்குத் தான் இந்த போஸ்டராம். தமிழனின் பலவீனத்தை தனியார் தொலைக்காட்சிகளும், செல்போன் நிறுவனங்களும் நல்லாவே பயன்படுத்தி காசைக் கறக்குறாங்க. புரிந்துகொள்ளும் நிலையில் தான் தமிழன் இல்லையே!

ஞாயிறு, 15 ஜூலை, 2012

எங்கப்பா ராமகோபாலன்...? கூப்பிடுங்க அவரை! காட்டுங்க இந்த காட்சியை!!

சமீபத்தில் இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிராமங்களிலோ, நகரங்களிலோ எருமை மாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள பசுக்களும், காளைகளும், எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசமாகவும் , தோலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும். இதன் ஆபத்தை உணர்ந்த கர்நாடக அரசு மாடுகளைக் கொல்வதை தடை செய்ததுடன் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதித்துள்ளது.
ஆந்திராவில் விவசாயிகளின் பரிதாப நிலையால் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் பாவத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை தமிழகத்துக்கு வரும் முன் தடுக்க முதல்வர் மாடுகளைக் கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வெளி மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்தோ , தமிழகம் வழியாகவோ மாடுகள் கொண்டு செல்வதையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தைப் பாருங்க; எருமையை வெட்டுறது முஸ்லிம் இல்லங்க. சாட்சாத் ராமகோபாலனின் பூணூல் வகையறாக்கள் தான். இதற்கு பெயர் எருமை வதை இல்லை என்று சொல்லப் போகிறாரா ராமகோபால அய்யர்..