OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

கடலூர் மீண்டும் ஒரு போபால்!!!!!!!!! தடுக்க என்ன வழி????


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலூர் மற்றும் சுற்றுப்புற காற்று மண்டலத்தின் நிலை, தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது.  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை முதல் பகுதி, 2-ம் பகுதி, மற்றும் தொழிற்பூங்கா என 2,500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளன. ஆலைகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், சாயங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பவை.



கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று பெருமளவு மாசுபடுகிறது.
கடலூர் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், இப்பகுதி காற்றை பக்கெட் என்ற நவீன முறையில் சேகரித்து, அமெரிக்க ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, முடிவை 2004-ல் கேஸ் ட்ரபிள் என்ற அறிக்கையாக வெளியிட்டது.÷கடலூர் காற்று மண்டலத்தில் (தொழிற்சாலைகள் பயன்படுத்தும் ரசாயனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால்) குளோரோஃபாம், டைகுளோரோ ஈத்தேன், பென்சீன் உள்ளிட்ட, எளிதில் ஆவியாகும் கரிம வேதியல் பொருள்கள், அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகம் இருப்பதை அறிக்கை வெளிப்படுத்தியது.
இவ்வேதியியல் பொருள்களால், கடலூர் காற்றைச் சுவாசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், தோல்நோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள்வர வாய்ப்பு இருப்பதாகவும், இவைகள் மனிதனை மெல்லச் சாகடிக்கும் தன்மை கொண்டவை என்றும், அறிக்கை எச்சரித்தது. எனவே இந்த அறிக்கையை தன்னேற்பு மனுவாக, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று, விசாரணை நடத்தியது. வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே 2007-ம் ஆண்டு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற "நீரீ' என்ற அமைப்பு, கடலூர் சிப்காட் காற்றுமண்டலத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. ÷இங்குள்ள காற்றில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் 2 ஆயிரம் மடங்கு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, காற்று மாசைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவ்வப்போது தெரிவித்தது.
ஆனால் 2009 டிசம்பர் மாதம் வெளியான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் அறிக்கை, கடலூர் சமூக ஆர்வலர்களைப் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்தியாவில் மோசமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட தொழில் பகுதிகளில், கடலூருக்கு 16-வது இடம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். நிலம் 64 சதவீதம், நீர் 65 சதவீதம், காற்று 54 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பதாவும், மொத்தத்தில் தொழிற்சாலைகளால் கடலூர் சுற்றுச்சூழல் 77.45 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. எனவே இங்கு புதிதாக ரசாயனத் தொழில்கள் கூடாது, இருக்கும் ஆலைகளிலும் விரிவாக்கம் கூடாது என்று அறிக்கை பரிந்துரைத்தது.
ஆனால் என்ன காரணத்தாலோ இந்த நிபந்தனையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த ஏப்ரல் மாதம் விலக்கிக் கொண்டது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே நீரீ மீண்டும் ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. விவரம் வெளியாக வில்லை.÷தொடர்ந்து 15 அறிக்கைளை கடந்த ஆண்டுகளில், கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ளது. காற்றில் கலந்துள்ள மாசுகளில், எந்த மாற்றமும் இல்லை, ஆலைகளால் கடலூர் மக்களுக்குத்தான் ஏமாற்றம்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அவ்வறிக்கைகளின் சாராம்சம். கண்காணிப்பகம் திங்கள்கிழமை தனது 16, 17-வது அறிக்கைகளை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது.
 2004-ல் கடலூர் காற்று மண்டலம் எத்தகைய மோசமான நிலையில் இருந்ததோ, அதேநிலையில் இன்னமும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. சிப்காட்டில் இரு தொழிற்சாலைகள் அருகே எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளை ஆய்வு செய்ததில் காற்றில், 16 ரசாயனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.÷அனுமதிக்கப்பட்ட அளவைவிட டைகுளோரோ ஈத்தேன் 7,432 மடங்கு, டைபுரோமோ மீத்தேன் 700 மடங்கு, குளோரோஃபாம் 214 மடங்கு, கார்பன் டெட்ரா குளோரைடு 45 மடங்கு, பென்சீன் 52 மடங்கு அதிகம் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
 அறிக்கையை கண்காணிப்பக ஆலோசகர் எம்.நிஜாமுதீன், ஒருங்கிணப்பாளர் அருள்செல்வன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழேந்தி, சிவசங்கர், ராமநாதன், ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஹசாரேவின் உண்மை முகம்................????????

ஞ்சம் ஊழல் கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் போராட்டங்கள்’, இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. 

உடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம். எத்தனையோ ஆண்டுகள் இருக்குமிடமே தெரியாமல் இருந்த அன்னா ஹஸாரே திடீரென ஒரு நாள் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவை ரட்சிக்க முளைத்ததும், அடடா முழு பெருமையும் அவருக்கே போவதா என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் அதற்கு பங்காளியாக முனைந்ததும், அதில் ஹஸாரேவும் பாபாவும் குழாயடிச் சண்டை போட்டதும் மறந்திருக்க நியாயமில்லை.

அவனை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்

 
க்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அந்த மக்களை மரணப் படுகுழிக்கு தள்ளும் பாழாய்ப்போன மது வியாபாரத்தை செய்து வருகிறது. மது விற்பனையின் மூலம் கோடிகள் கஜானாவை நிறைப்பதால், என்னதான்  பூரண மதுவிலக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் மது எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க அரசு தயாராக இல்லை. நேரடியாக பூரண மதுவிலக்கு இல்லை  என்று சொல்ல திராணியின்றி,  அரசு  பல்வேறு நொண்டிச் சாக்குகளை இந்த விசயத்தில் சொல்லி வருகிறது. அதில்  ஒன்றுதான் ''பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்' என்ற அமைச்சரின் பதில்.  
 
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு (அணைக்கட்டு தொகுதி) பேசும்போது, ''தமிழக அரசின் நிதி நிலையைப் பற்றி கவலைப்படாமல் லாட்டரி சீட்டை ஒழித்ததுபோல, பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேச,
 
இதற்கு பதிலளித்த  மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுவின் தீமையை இந்த அரசு உணராமல் இல்லை. அதில் மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தபோதிலும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை கொண்டு வராத நிலையில், தனித்தீவு போல நாம் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்காது. பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும்'' என்று கூறியுள்ளார். 
 
அமைச்சரின் பதிலை கூர்ந்து கவனித்தால் எவ்வளவு நகைச்சுவையானது என்பது புலப்படும். அண்டை மாநிலங்களில் பூரணமதுவிலக்கு அமுல்படுத்தப்படாமல் தமிழகத்தில் மட்டும் 
அமுல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும் என்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி,  தமிழகத்தில் தற்போது 'டாஸ்மாக்' மூலம் மதுவிற்பனை அமலில்  இருக்கையில் கள்ளச்சாராயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இருக்கிறது என்றும் ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதே அமைச்சர் கூறுகிறார். இதிலிருந்து புரிவது என்ன? மது விற்பனை அமலில் இருந்தாலும், பூரண மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை என்பது ஆங்காங்கே நடக்கும் என்பதுதான். எனவே பூரண மதுவிலக்கை அமலாக்கினால் அண்டை மாநிலங்கள் வாயிலாக கள்ளசாராயம் பெருகிவிடும் என்ற அமைச்சரின் கூற்று  அர்த்தமற்றது என்பது தெளிவாகிறது.
 
எனவே உப்புச்சப்பில்லாத காரணங்கள் கூறி மதுவிற்பனையை தொடர அரசு நினைப்பதைவிட, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி, கள்ளச் சாராயத்தையும் கட்டுப்படுத்தி, தமிழக அரசை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வழிவகை காண முதல்வர் முயற்ச்சிக்கலாமே?

புதன், 17 ஆகஸ்ட், 2011

தெரிந்து கொள்வோம் ஐபோன் பற்றி - 1


நான் ஏற்கனவே என்னுடைய வலைசரத்தில் ஐபோன் பற்றி ஒரு பதிவு எழுதிள்ளேன், அதை தொடர்ந்து..............இன்று ஐபோன் பற்றி ஒரு செய்தி.
இன்று உலகில் எங்கு பார்த்தாலும் இந்த பாலா போன ஐபோன் மோகம் அதிகரித்து கொண்டே வருகின்றது. என்னதான் சாம்சங், எல்ஜி, ஹச்டிசீ போன்ற நிறுவனங்கள் எல்லாம் பலமாதிரியான மொபைல்கள்  தயாரித்தாலும் அது என்னவோ தெரியலை இந்த ஐபோனுக்குதான் ரொம்ப மௌஸ் அதிகமாகி கொண்டே வருகின்றது................அப்படி என்னதான் என்று பார்க்க http://flypno.blogspot.com/2011/06/blog-post_390.html இங்கே கிளிக் செய்து பார்க்கவும். நாம் இப்போது பதிவிற்கு போவோம்,

புதியதாக இந்த ஐபோனை உபயோகபடுதுவோர் அதை முழுவதும் அறிந்து கொள்ள சிறிது காலம் வேண்டும்,..........எனக்கு தெரிந்து  இந்த ஐபோனில் ஈமெயில் உபயோகபடுத்தும் பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது சோம்பல் காரணமாக கூட மாற்றமால் இருப்பார்கள், அது என்னவென்றால் நீங்கள் ஐபோனில் இருந்து ஈமெயில் அனுப்பினால் அதில் பொதுவாக உங்கள் கையெழுத்து பகுதியில் இப்படி இருக்கும் "Sent from iphone" இதனை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கே பாப்போம்.

முதலில் உங்கள் ஐபோன் ஹோம் ஸ்க்ரீனுக்கு போங்கள், பிறகு அங்குள்ள செட்டிங்க்ஸ் திறங்க, அதில் ஈமெயில், காண்டக்ட்ஸ், காலேண்டேர்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது பார்த்தால் அதில் கையெழுத்து (signature) பகுதியில் உங்களுக்கு வேண்டியாவாறு டைப் செய்து கொள்ளுங்கள்.........அவ்வளவுதான்.............மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.................




செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

உட்கார்ந்து யோசிச்சது....17

என்னடா இவன் எப்ப பார்த்தாலும் உட்கார்ந்து யோசிச்சது அப்படின்னு சொல்லிட்டு மரண மொக்கை போடுறானே அப்படின்னு பார்க்காதீங்க.............கண்டிப்பாக இதுல ஒரு மெசேஜ் இருக்கும்...............இப்ப வாங்க கொஞ்சம் சிரிக்கவும் செய்வோம்............

சில தெரிந்தே சொல்ல கூடிய பொய்கள்.

டீ மாஸ்டர்: இப்போ போட்ட வடை சார் (வடை போச்ச)
மருந்துகடைகாரர்: பேருதான் வேற, இது நல்ல கம்பெனி
ஸ்கூல் பய்யன்: வயித்த வலிகுதுமா (வழிச்சா கக்கா போடா செல்லம்)
ரியல் எஸ்டேட் காரன்: பத்து நிமிஷம் தூரத்துல நூறு அடி ரோடு சார்.
காய்கரிகடைகாரன்: காலைல தான் பரிச்சதுமா (என்னமோ இவன் போய் பறிச்ச மாதிரி)
சேல்ஸ் மேன்: இந்த ஆபர் முப்பதாம் தேதியோடு முடியுது சார்
பஸ் கண்டக்டர்: வழில எங்கேயும் நிக்காது இது பாயிண்ட் டு பாயிண்ட் (அதுக்குன்னு ஒன்னுக்கு போறதுக்கு கூடவா நிக்காது?????????)

ஒரு புடவைக்கடை விளம்பரம்:
10 நிமிடங்களில் புடை எடுபவர்களுக்கு 50% தள்ளுபடி:

ஒரு பெட்ரோல் பங்கின் அறிவிப்பு பலகையில்:

புகை பிடிக்காதீர்கள், உங்களுக்கு வேணும்னா உங்கள் உயிர் விலையற்றதாக இருக்கலாம், ஆனால் எங்கள் பெட்ரோல் ரொம்ப விலைமிக்கது.

ஒருத்தன் கண் டாக்டரிடம் போனான்:
அங்கே அறிவிப்பு பலகையில் டாக்டரின் பார்வை நேரம் மாலை 6-9 என்று இருந்ததை பார்த்துவிட்டு...............அவன் மனைவியிடம் கூறினான் போயும் போயும் நான் இந்த டாக்டரிடமா  வந்தேன் இவருக்கு  மூணு  மணி  நேரம்தான்  கண்ணு  தெரியுமாம்  அப்படினா???

ஒரு சர்தார் ஜோக்:
சர்தார்: டாக்டர், எனக்கு கனவில தினமும் எலி எல்லாம் புட்பால் விளைடுகின்றது என்றார்:
டாக்டர்: சரி இந்த மாதிரியை இன்று ராத்திரியில் இருந்து எடுத்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாகி விடும்.
சர்தார்: சரி நான் நாளைல இருந்து எடுத்துக்குறேன், ஏனென்றால், இன்னைக்குதான் பைனல்ஸ்!!!!!!!!!!!!!!!


மெசேஜ் இருக்குனு சொல்லிட்டேன் அது என்னவென்று நீங்களும் மண்டையை பிச்சுபீங்க..................கீழே படிங்க...............


அரசு மகளிர் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு மூன்று கழிவறைகள், முன்னூறு லாப்டாப்கள் ....................no logic and no comments.............


பிடிக்காவிட்டாலும் நீங்க ஒட்டு போடுங்க.................

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுதந்திரதின வாழ்த்து கூற நமக்கெல்லாம் வெட்கமா இல்லை?????


இன்று இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்துநான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதனை முன்னிட்டு இன்று எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி நிகழ்வுகள், அதே வந்தே மாதரம், அதே இனிப்புகள்............சரி அதை விடுவோம், தீபாவளி, பொங்கல் போன்று அதையும் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள், இன்னும் பலர் வாழ்த்து தெரிவிகிறார்கள்.

உண்மையிலேயே இந்த வாழ்த்து தெரிவிப்பதற்கு நாம் தகுதியானவர்களா? அப்படி நம் இந்தியா சுதந்திரம் அடைந்து என்னத்த சாதித்து விட்டது.......? இந்த நாட்டில் அனைவருக்கு ஒரு வேலை உணவு கிடைக்கின்றதா? பிச்சைகாரர்கள் இல்லாத தெரு உண்டா? சேரி இல்லாத ஊரு உண்டா? அட சுத்தமான ஒரு பொதுகழிப்பிடம்  எங்கேயாவது உண்டா???? என்றாவது கற்பழிப்பு செய்தி வராத நாள் உண்டா? கொலை நடக்காத நாட்கள்தான் உண்டா?இப்படி இன்னும் பல அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் நாம் அடுக்கும் எந்த ஒரு கேள்விக்கும், இங்கே யாராலும் பதில் கூற முடியாது ஏன் என்றால் அதுதான் நாம் கண்ட சுதந்திரம். இன்னும் சொல்ல போனால் இந்த சுதந்திரம் யாரால் கிடைத்தது என்பதில் கூட நமக்குள் சண்டை, அதனால் பல வரலாறுகள் திரிக்க பட்டன, பல வரலாறுகள் மறைக்கப்பட்டன, 

அன்று ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம், அதையாவது பொருத்து கொள்ளலாம், ஆனால் இன்று இந்த நாட்டு குடிமகனாகிய நாம் இந்த குடிமகங்களிடமே அடிமையாக இருக்கிறோம், அவன் நம் கண் முன்னே நம்மை திருடினான், அதையாவது ஏற்று கொள்ளலாம், ஆனால் இன்று இந்த அரசியல் (அயோக்கிய) வாதிகள், நம்மை முதுகில் குத்துகிறார்கள், ஒட்டு கேட்க்கும் பொது பேசும் பேச்சை ஓவர் நைட்லே மறந்துடுறான். இங்கு மக்களை சுரண்டி அவன் அவன் சேர்த்த சொத்துக்களின் விபரம் நம் இந்திய நாட்டை விட மிக பெரிதாக நீண்டு கொண்டே போகின்றது, இங்குள்ள ஆறுகளில் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை போட்டால் இந்தியாவில் இன்னொரு சுனாமி வருவது நிச்சயம்....... அது மட்டுமா இந்த கொள்ளை காரர்கள் மட்டுமின்றி மதத்தின் பெயரால் சாமியார்கள் செய்யும் அட்டுழியங்களை என்னவென்று சொல்வது...............முடியலை!!!!!!!

தினதோறும் செய்திகளில் வெறும் கற்பழிப்பு, கொலை, கள்ளகாதல், ஊழல், கடத்தல், சிசு கொலை, இதை தவிர வேற என்னவென்று பார்த்தல் விளையாட்டு மற்றும் சினிமா??????????????? இங்கே கண்டிப்பாக இந்த விளையாட்டு சினிமாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும், 

முதலில் இந்த விளையாட்டை பாப்போம், இங்கே இந்தியாவில் மட்டும்தாங்க, விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேற எதுவுமில்லை,,,,,,,,,,,,,,என்ன கொடுமைடா சாமி.......................???????இதனால் தான் நாம் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட பெற முடியவில்லை, ஏன் ஒரு டென்னிஸ், கால்பந்து எதுக்கும், லாயக்கு இல்லை.................ஏன், இந்த நாட்டில் ஸ்பொன்சர் செய்யும் அமைப்புகள் கிரிக்கெட் தறுதலைகளுக்கு தவிர வேற யாருக்கும், செய்வது கிடையாது, இதில் கொடுமை என்னவென்றால் இந்திய அரசாங்கம் கூட இதற்க்கு ஒரு முயற்சி எடுப்பது இல்லை என்று நினைக்கும் போது..............நாம் பெற்ற சுதந்திரத்தை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.............அப்புறம் இந்த ரசிகர்கள்...............ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை!!!!!!!!!!!!!!!!!!

அப்புறம் இந்த சினிமா? உலகமெங்கும் சினிமா இருக்கிறதுதான், சினிமா காரங்க இருகிறாங்க தான், ஆனா இந்த இந்தியாவில் மட்டும் தான் நடிகைக்கு கோவில் கட்டுவானுங்க, நடிகருக்கு உடம் சரியில்லை என்றால்..............மொட்டை போடுவாங்க..................பாதயாத்திரை போவாங்க..............மூதேவிங்க என்னைக்குதான் திருந்த போகுதுன்னு தெரியலை....................!!!!!!!!!!!

இதையெல்லாம், நான் ஏன் கூறுகிறேன் என்றால், இந்த அரசியல் வாதிகள் நம்மை இந்த சினிமா மோகத்திலும், கிரிக்கெட் மோகத்திலும் திளைக்க வைத்துதான் நம்மை அடிமை படுத்தி வைத்திருகிறார்கள்,.................இதை எல்லாம், எதிர்த்து உண்ணா விரதமிருக்கிறார் ஒரு அறிவு ஜீவி................அவரும் ஒரு காலத்தில் இதே போன்று கொள்ளை அடித்தவர்தான்..................அப்புறம் இங்குள்ள செய்திதாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒரு ஊடகம் வைத்து இருகிறார்கள், அதன் மூலம் அவனவன் மாறி மாறி திட்டி கொள்கிறான் கேட்டால் இதற்க்கு பெயர்தான் செய்தியாம்..............அப்புறம் சுதந்திரதினம் வந்து விட்டால் போதும், ,,,,,,,,,,,,,அன்று முழுவதும் சிறப்பு நிகழ்சிகள் அட அது என்னவென்று பார்த்தால் , வெறும் சினிமாகாரர்களின்  பேட்டியும், புது படமும், மற்றும் வெட்டி அரட்டைகளும்தான் இடம் பெரும்.............இதுக்கும் நம் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..................இவர்கள் பேட்டிகாணும் இவர்கள் என்ன செய்தார்கள் இந்த சுதந்திரத்துக்காக..........எந்த ஒரு ஊடகமாவது ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் வாழ்கை வரலாறு என்று எதாவது காண்பித்தது உண்டா................இல்லை இன்று அவர்களின் சந்ததியினர் படும் அவஸ்தைகளை ஆராய்ந்தது உண்டா..................????????????????

இப்படி நமக்குள் பல கேள்விகளை வைத்து கொண்டு...............இன்னும் கொடிஏத்தி வந்தே மாதரம் பாடி இனிப்பு குடுத்து கொண்டே இருந்தால்................கிடைத்து விடுமா இந்த சுதந்திரம்??????????????????????? சிந்திக்கும் மக்களுக்கு இந்த பதிவு!!!!!!!!!!!!!!. பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போடுங்க....................உங்கள் கருத்தக்களை வரவேற்கிறேன்........

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

நன்றி கெட்ட இந்திய அரசாங்கம்................




கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்
நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.
நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.” இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்
பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் பாபரிநாமாஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;    பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்லமறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தடதடக்கும் அமெரிக்கப் பொருளாதாரம்… !


அமெரிக்கா எத்தனை பலமாக தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் பரப்பியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு… இந்த வாரம் கிடைத்தது.

அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது.

அதுஎன்ன கடன் தர வரிசை?

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பாங்கு மற்றும் வசதிதான் கடன் தர வரிசை என்று சொல்லப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் இருந்தது அமெரிக்கா, இதுநாள் வரை.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை தொட்டுவிடும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.

அதாவது இந்த அளவை தாண்டிவிட்டால் புதிய கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். எனவே அளவை உயர்த்த வேண்டும், அல்லது கடனே வாங்கக் கூடாது. இரண்டாவது சாத்தியமில்லாத சமாச்சாரம்.

அமெரிக்காவின் கடன் அளவு 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது.

இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், குடியரசுக் கட்சியினரை தாஜா செய்ய வேண்டிய நிலை.

2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் சமரசமாகி, மேலும் 2.5 டிரில்லியன் வரை கடன் வாங்கும் அளவை உயர்த்த ஒப்புக் கொண்டனர். ஒரு தற்காலிக நிம்மதி அமெரிக்காவுக்கு.

ஆனால் புதிதாக முளைத்துள்ள பிரச்சினை கொஞ்சமல்ல…

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீட்டு மாளிகை மாதிரி சரிந்திருக்கும்.

இதனால்தான் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் அமைப்பு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA+ என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. இனி ஏகபோகமாக அதிகாரம் செலுத்த முடியாது அமெரிக்காவால். கடன் கொடு என இத்தனை காலம் அதிகாரமாய் கேட்டு வந்த அமெரிக்கா, இனி கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே பயம் பரவிவிட்டது.

இதன் விளைவுதான் உலக பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் தொடர்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் அந்த சறுக்கல் தொடர்ந்தது.

அது ஏன் அமெரிக்காவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டுகிறது?

அமெரிக்கா மூலம் அவ்வளவு வருமானம் ஆசிய நாடுகளுக்கு. இந்த நாடுகளைத்தானே அமெரிக்கா பல விஷயங்களுக்கு நம்பி இருக்கிறது. கொஞ்சம் பச்சையாக சொன்னால், முதலாளி சறுக்கி விழுந்தால் கூலிகளின் நிலைமை என்னாகும்… அதேதான் இப்போது நடக்கிறது!

இந்த பாதிப்பு தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதே உண்மை.

பங்குச் சந்தைகள் இப்படி சரிந்து கிடப்பதால், இப்போதைக்கு எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்யக் கூடும். எனவே இன்னும் சில மாதங்கள் – வருடங்களுக்கு வரலாறு காணாத விலை உயர்வு என தங்கம் பற்றி செய்தி படித்துக் கொண்டிருக்க வேண்டி வரலாம்!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நேர்மையில்லாத தங்க வியாபாரிகள், ஏமாறும் கோமாளி மக்கள்.......சிந்திக்குமா?

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவு மோசடியும், கொள்ளையும், மொள்ளமாரிதனமும் நிறைந்தது இந்த தங்க வியாபாரம் என்றால் அது மிகையாகாது.



தங்கத்திற்கு இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையான விலை உண்டு, ஒன்று மூலபொருளுகான விலை, மற்றொன்று நாம் விரும்பும் வகையில் செய்வதற்கான கூலி. இந்த இரண்டு மட்டுமே இருந்தால் அது நியாயமானதுதான். ஐந்து பவுன் நகை வாங்கினால் அந்த தங்கத்திற்கும், அந்த நகை செய்ய தேவையான கூலியும் வாங்கினால் இதில் ஏதும் மோசடி இல்லை. ஆனால் இன்று என்ன நடக்கின்றது.........!!!!!!!!!!

ஐந்து பவுன் தங்கத்திற்கும், செய்வதற்கான கூலியையும் மேலும் அந்த நகை செய்யும் பொது ஏற்பட்ட சேதாரம் என்று கூறி அதையும் நம்மிடமே வாங்கிகொள்வார்கள்...........இதில் தான் மோசடி உள்ளது......எப்படி என்று பாப்போம். 

அதாவது மேற்கண்ட நகை செய்யும் பொது பத்து சதவிகிதம் சேதாரம் என்று கூறி அதற்க்கான தொகையையும் நம்மிடம் வசூலித்து விடுகின்றனர். அதாது ஐந்து பவூனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவூனுக்கும் சேர்த்து சேதாரம் என்ற பெயரில் பணம் வாங்கி கொள்கின்றார்கள். நகை செய்யும் போது சேதாரம் ஆகிவிட்டால் அதை நம்மிடம் வாங்கி கொள்வது முறையானதுதான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும்போதும், பட்டை தீட்டும் போதும் கீழே சிதறிவிழுகின்ற துகள்கள்   குப்பைக்கு ஒன்றும் போவது கிடையாது, அது எல்லாம் அடுத்த நகை செய்யும் போது பயன்படுத்தி கொள்ளுவார்கள். இதற்கெல்லாம் சேர்த்துதான் செய்கூலி என்று வாங்குவார்கள், மக்களுக்கு தெரியாத டெக்னிகல் வார்த்தைகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இப்படி செய்யாத வியாபாரிகளே  காணமுடியாது.

இரண்டாவது மோசடி என்னவென்றால், கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்:-
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்துகிராம் கண்ணாடி கற்களை பதித்த நகைக்கு விலை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்திற்கு தங்கத்தின் விலையும், பத்து கிராம் கண்ணாடி கல்லுக்கு கல்லின் விலையும் வைத்து விற்கவேண்டும், ஆனால் நாற்பது கிராம் தங்கத்திற்கு ஐம்பது கிராம் தங்கத்தின் விலையை நம்மிடம் வாங்கி விடுகிறார்கள். தங்கத்தின் விலையும், கல்லின் விலையும் சமமாவை அல்ல, இரண்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது........இன்னும் சிலபேர் நாற்பது கிராமிற்கு ஐம்பது கிராமின் பணத்தை வாங்கி கொண்டு கல்லிற்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கின்றனர்......அதே சமயம் நாம் பழைய நகையை விற்க சென்றால் கல்லை அகற்றி விட்டு நகைக்கு மட்டும் விலை போடுகிறார்கள், இதை விட ஒரு பெரிய மோசடி உலகத்தில் வேற உண்டா?

சொக்கத்தங்கம் என்ற தனிதங்கத்தில் நகை செய்யமுடியாது அதனுடன் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும். 
அதாவது 1000 கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகைதான் இன்று 22K என்றும், 916 KDM என்றும் அழைக்கபடுகின்றது.

அது போல பழைய நகையை விற்க சென்றால் செய்கூலி சேதாரம் எல்லாம் தரமாட்டார்கள் அது நியாயம்தான், ஆனால் அவர்கள் விற்கும் விலையை குடுக்க வேண்டும் என்று கூறவில்லை? வாங்கும் விலையாவது அப்படியே தரவேண்டும் அல்லவா? அவ்வாறு இல்லாமல், அதிலும் கால் வாசி குறைத்துதான் தருவார்கள்,.

இந்த மாதிரி தங்க வியாபாரத்தில் எந்தவித ஒரு நேர்மையும் இல்லை என்பதே உண்மை.

இதை ஏன் மக்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்று வரை கேட்க முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..............இனியாவது கேள்வி கேட்போமா ??????????

நன்றி: onlinepj.com 




முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்...!


நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

புகைப்படம் தரும் செய்தி

சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல அர்த்தங்கள் புரியும்.................புரிந்தால் சரி!!!!!!!!

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

மனிதவளம் மொத்தமாக புறக்கணிக்கப்படும் தொழில்மயம் யாருக்காக?

கடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்...?


கடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர் மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும்

புதன், 3 ஆகஸ்ட், 2011

200 ஆவது பதிவு!!!!!!!என்று திருந்தும் இந்த வலைபூக்கள்..........


கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் பதிவை தொடங்கி, கடந்த மார்ச்சில் நூறாவது பதிவை முடித்து, இதோ இன்று உங்கள் முன் நமது இருநூறாவது பதிவு. நான் நூறாவது பதிவு போடும் போதே ஒருவர் கமெண்ட் பகுதியில் கூறியிருந்தார் இன்னும் நல்லதாக போட்டு இருக்காலாம் என்று. அவரின் கருத்தை ஏற்று இதோ என்னுடைய இருநூறாவது பதிவு.!!!!!!!!!!



எனது இந்த பதிவின் மூலம் நான் எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.....................!!!!!!!!!!!!

இன்று நமது வலைபூக்களை எடுத்து கொண்டால், வருகின்ற செய்திகள், இதான், ரஜினிக்கு கக்கா வரவில்லை, மீண்டும்  ராணா தொடங்குவாரா????? சச்சின் நூறாவது கக்கா எப்ப அடிப்பார் ?????? நமிதாவிற்கும் , சோனாவிர்க்கும்,  சண்டை??? பதினாலு வயது சிறுமி கற்பழிப்பு???????????? 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்.............இன்னும் பல அசிங்கங்கள்.........!!!!!!!!!!!!!!!!

நமது இந்தியாவில், நாம் (வலைபதிவர்கள்) ஒன்று கூடி எழுத நிறைய உண்டு, இன்று பிரபலமாக பேசப்பட்டு வரும் ஊழல், இதை நாம் ஒருமித்த கருத்துக்களை எழுதினால் அதற்க்கு நாலு பெருகிட்டே ஆதரவு கிடைக்கும், அதை பற்றின ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு கிடைக்கும், அதை விட்டுட்டு ஊழல்,  செய்றவனே அதற்க்கு எதிராக உண்ணா விரதம் இருக்கிறான் அதை நாம் எழுதி அவனை பெரியாளாகுகிறோம், அப்புறம் இந்த ரஜினி பற்றிய செய்தி, சத்தியமா சொல்லுறேன் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, அட ரஜினி என்பவன் ஒரு மாயை அவன் திரையில்தான் சாகசங்கள் செய்ய முடியும், அது அவனுடைய பிழைப்பு, இதை அறியாமல், அவனுங்காக வேண்டி என்ன என்ன கேவலமான காரியங்கள்,. என்று திருந்தும் என் தமிழ் மக்கள்.................அப்புறம் பார்த்தா சச்சின்................ஸ்ஸ் ஸ்ஸ்........முடியல...........???? அவன் நூறாவது சதமடித்தால் என்ன, நூறாவது கக்கா போன உங்களுக்கு என்ன??????என்னமோ பெரிசா இந்தியாவுக்கு சாதிச்ச மாதிரிதான் எழுதுறீங்க.............இங்கே விளையாட்டை விளையாட்ட எடுதுகுறது இல்லை, அதான் என்னைக்கும் இந்தியா என்கின்ற பிசிசி அணி யாருகூட தோர்தாலும் ஜெய்தாலும் அங்கே அங்கே ஒரு மரணம் அதிர்ச்சியில் நடக்கிறது செய்திகளில் படிக்கிறோம், 
அப்புறம் அந்த நடிகை அவன் கூட சுத்துறா, இந்த நடிகை இவன் கூட சுத்துறா? இப்படி நம் சமுதாயத்தை குறிப்பாக நம் இளைய சமுதாயத்தை நாரடிக்கவே இந்த மாதிரியான தலைப்புகள்.........கேட்டால் அப்போதான் அவுங்க ப்ளாக் பிரபலம் ஆகுமாம். தான் நல்ல அடுத்தவன் எப்படி வேணும்னாலும் கெட்டு போகலாம் அப்படிதானே உங்க எண்ணம்..................சிந்தியுங்கள்.........!!!!!!!!!!!!

இங்கே நாம் எழுதுவதற்கு எத்தனை மிக நல்ல செய்திகள் இருக்கிறது, எத்தனை பேரு ஒரு வேலை சோறு கிடைக்காமல் கஷ்டபடுகிறார்கள், அவர்களுக்கு நமது வலைப்பூவின் மூலம் எதாவது வழி செய்யலாம், இல்லை தமிழகத்தில் அங்கே அங்கே எத்தனையோ அவலங்கள் (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தை தொழிலாளிகள், ) சும்மா தலை விரித்தாடுகிறது அதை அழகான முறையில் அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டலாம், ஊழலை தடுக்க  என்ன வழி வகைகள் உண்டு என்பதை சட்டத்தின் வாயிலாக மக்களுக்கு எப்படி உணர்த்துவது போண்டவற்றை பரப்பலாம், அந்த சட்டத்தினை பற்றிய செய்தகளை தொடர்பவைகளாக பதிவிடலாம், இதை எல்லாம் விட்டு விட்டு, ஒருத்தன் தல புராணம், இனோருதன் தளபதி புராணம், இநோருதன் தாதா புராணம்............இது இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாரு. 

இன்னொரு முக்கியமான ஒன்னு, இந்த கற்பழிப்பு செய்திகளை எழுதும் பொது தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள், நீங்கள் எழுத போவது ஒரு பெண்ணை பற்றி,,,,,,,,,,,,,,அதனுடைய எதிர்காலத்தை சிந்தித்து எழுதுங்கள்.............ஒரு முறை எழுதவதோடு நிறுத்தி கொள்ளுங்கள் அதை யாரும் மறு பதிவு செய்யாதீர்கள்....................கண்டிப்பாக நாம் ஒரு பெண்ணின் வாழ்கையில் விளையாடுவது மிகவும் தவறு......................!!!!!!!!!!!!!

இப்படி இன்னும் நிறைய கேவலமான செய்திகள்..............இதை மறந்துட்டேனே, கள்ள காதல் பற்றிய செய்திகள்............கொய்யாலே இதை மட்டும் இந்தியால மட்டுமில்லை உலகம் பூர எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து எழுதுறானுங்க............அதுவும் என்னமோ நேர்லயே போய் பார்த்த மாதிரி.............!!!!! அதுவும் அதற்க்கு இவுனுங்க வைக்கின்ற தலைப்பு இருக்கே..............படிக்கவே சகிகாது.................

இப்படி எல்லாம் நிறைய பேரு இருந்தாலும், சமுதாய நலன் கருதி எழுத கூடியவர்களும் உண்டு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.............அவர்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன்.............மேலும் இது வரை எனது பதிவுகளை பார்த்தும், கருத்துக்களை பதிவிட்டும் கொண்ட எனது பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.,,,,,,,,,,,,,,,,,,,,,

ஒரு சின்ன வருத்தம், இது வரை எனது நண்பர்கள் என்று சொல்லி கொண்டிருபவர்கள் யாரு இது வரை ஒரு கமெண்ட்ஸ் கூட போட வில்லை, ஒரு வேலை அவர்களும், சினிமா விமர்சனம், 18+ போன்றவைகளை விரும்புகிறார்களோ  என்னவோ .....................????????????? 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்தியா கற்பழிப்பு: தோணி ஐசிசியில் புகார்











108 ஒரு அரசு நிறுவனமா?



  • விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.
  • 108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.
  • ஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.
  • அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு  சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.
  • திடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.
  • விலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.
  • ஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
  • மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.
  • வேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர்  முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை  ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.
  • 108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள  போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.
  • வேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள்.  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில்  பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.
  • இப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.
  • 108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி  சேவை செய்ய முன் வந்தார்? 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான  ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.
  • இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு?
முதலில் செலவைப் பார்ப்போம்.
ஒரு மாதத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு:
எரிபொருள்                                                                    ரூ. 20,000
பராமரிப்பு                                                                       ரூ.    5,000
2 பைலட்டுகள் சம்பளம்                                        ரூ.   11,400
2 இ.எம்.டி. களுக்கான சம்பளம்                        ரூ.   13,000
வார விடுமுறையில் மாற்றம் செய்யும்
பைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம   ரூ.     5,000
மருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு  ரூ.     2,000
இதர செலவுகள்                                                           ரூ.     3,600
ஆக, மொத்தம்                                                              ரூ. 60,000
400 வாகனங்களுக்கு, 400 X 60,000 =            ரூ. 2,40,00,000.
ஒரு ஆண்டிற்கு, 12 X 2,40,00,000 =                ரூ. 28,80,00,000.
இனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.
மொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.
ஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்
ஒரு நாளைக்கு 3,000 X 1,500= 45,00,000 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 30 X 45,00,000= 13,50,00,000 ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்
ஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:
வரவு         = 162.00 கோடி.
செலவு     =   28.80 கோடி.
ஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.

108 ஒரு அரசு நிறுவனமா?

108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்.