OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 28 ஏப்ரல், 2011

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா?



இந்த பதிவுக்கு இது போன்ற தலைப்பை விட இரண்டு ________ களின்கேம் ஷோ , என்றோ ராஜ் டிவியின் முள்ளமாரித்தனம் என்றோ,தொலைக்காட்சியின் வியாபார விபச்சாரம் என்றோ இன்னும் சில கோபமான தலைப்புகளும் மனதில் எழுந்த போதும் பதிவுலகில் சீரியசான பதிவுகள் படிக்கப்படுவதை காட்டிலும் காமெடியான பதிவுகள் அதிகமாக படிக்கப்படுகின்றது என்ற காரணத்தால் (அல்லது நானே நினைத்துக்கொண்டதால்)இந்த தலைப்பை வைத்து இருக்கின்றேன்.

ராஜ் டிவியில் கீழே உள்ளம் கேம் ஷோ ஐ எப்பவாவது பார்த்து இருப்பீர்கள். படத்தில் காணும் நபர்கள் யார் என்பதை கால் பண்ணி சொன்னால் பணம் 60000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவலை பெரிய எழுத்திலும், ஒரு காலுக்கு (call-அழைப்பு) 10 கட்டணம் என்பதை சிறிய எழுத்திலும் அமைத்து ஒளிபரப்புகின்றார்கள். ஒரு 100 ரூபாயாவது யாருக்காவது கொடுத்தால் சந்தோசம் தான். ஆனால் இது ஒரு நேரடி ஒளிபரப்பே இல்லை என்பது தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

ரெகார்ட் செய்த வீடியோ கிளிப்புகளை கொண்டு நேரடி ஒளிப்பரப்புபோன்று ஒளிபரப்பு செய்யப்படுகின்ற இந்த திருட்டுத்தனம் ஏன்? இந்த நிகழ்ச்சி தினமும் குறைந்த பட்சம் 2 முறை அரைமணி நேரம் வீதம் மொத்தம் 1 மணி நேரம் ஒளிபரப்புகிண்டார்கள். ஒரு நாளில் ஒரு நிமிடத்திற்கு இருவர் என்று ஆசைப்பட்டு (பேராசை பட்டு) கால் செய்தால் கூட 60 நிமிடத்திற்கு 120 பேர் வீதம் 1200 ரூபாயை மக்களிடம் இருந்து திருடிக்கொண்டு இருக்கின்றார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது நேரடி ஒளிபரப்பு அல்ல (live) என்பதே தெரியவில்லை. படிக்க தெரிந்தவர்கள் live என்ற வார்த்தை இருக்கின்றதா என்பதை பார்க்க கூட மனம் வராது.

காரணம் இந்த ரெண்டு ನೈಕಲುಂ பேசுவதை கேட்கும் போது இது நேரடி ஒளிபரப்பு என்று நினைத்து விடுவார்கள். நான் பழகும் மனிதர்களில் தினமும் ஒருவராவது குறைந்தபட்சம் 250 ரூபாயாவது தொலைத்துவிட்டு லைன் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றார்கள். அப்போதும் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் ஏமாற்றப்படுவது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். லாட்டரியை விட மோசமான ஒன்று இது. அதில் குறைந்த பட்சம் பணத்திற்கு ஒரு சீட்டையாவது தருகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்து ஏமாறுபவர்கள் எல்லாம் அதிகம் கல்வி அறிவு இல்லாத, பண வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான். இது போன்ற மக்களிடம் இருந்து நேரடியாக திருட திருடர்களுக்கு கூட மனம் வராது. ஆனால் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டிய ஊடகத்துறை இது போன்ற கொள்ளைகளில் ஈடுபடுவது மிகவும் கேவலமான ஒன்று. அப்படி கொள்ளை அடிக்கும் அளவுக்கு பணம் வேண்டும் என்றால் இதோ, ரெகார்ட் கால்ஸ் என்று தெரிந்தே இது மக்கள் ஏமாற்றுகின்றோம் என்று தெரிந்தே இது போல நடிக்கும் இந்த ____ கொண்டு ஆபாச படங்களைஎடுத்து (porngrapy) நடு இரவுகளில் ஒளிபரப்பு செய்து கொண்டு trp ரேட்டை அதிகமாக்கி கொள்ளலாம். விளம்பரங்களின் மூலம் இதைவிட அதிக பணம் கிடைக்கும்.

இதில் ராஜ் டிவி www.vettrimaalai.com என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து திருடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மின் அஞ்சல் முகவரி customercare@vettrimaalai.com ஆகும். அவர்கள் தான் இந்த தொலைபேசி எண்ணின் மூலம் பணத்தை திருடி ராஜ் டிவிக்கு பங்கு கொடுப்பவர்கள்.

இதை படிக்கும் யாராவது சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள். குறைந்த பட்சம் அவர்களின் மின் அஞ்சலுக்கு நமது கோபத்தை வெளிபடுத்துவோம். பதிவுலகில் இதை பற்றி அதிகமாக விமர்சித்தால் அது இந்த ராஜ் நிறுவனத்தை சென்று அடையும். அதன் மூலம் அந்த நிறுவனமே இந்த நிகழ்ச்சியை நிறுத்தினால் மட்டுமே இந்த திருட்டை தடுக்க முடியும். இதை இன்டலியில் பாப்புலர் ஆக வேண்டும். அல்லது இதை பற்றிய கட்டுரை அதிகமாக வர வேண்டும்.

குறைந்த பட்சம் இதை காப்பி & பேஸ்ட் செய்து உங்கள் பதிவாக அல்லதுமீள்பதிவாக இடுங்கள்எனது பதிவின் பெயர் போட வேண்டும் என்றஅவசியம் நிச்சயம் இல்லை

இந்த கண் முன்னே நடக்கும் திருட்டை நம்மால் தடுக்க முடியுமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்வோம்.

மேலே படத்தில் உள்ள थिदार्कालाई எங்கேயாவது பார்த்தால் ..........................................! 

தாமதிக்கப்ப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்

தாமதிக்கப்ப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற சொல் வழக்கு உண்டு. அதை உண்மைப்  படுத்துவது போன்றே நமது நீதிமன்றங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஒரு கொலை வழக்கு கோர்ட்டுக்கு போனால், கொலையாளி செத்தபின்பு அவனுக்கு மரணதண்டனை வழங்குவதும், வாய்க்கால் தகராறுக்காக கோர்ட்டுக்குப் போனால், வயலையே விற்று செலவு செய்தபின்பு தீர்ப்பு வருவதும், இவ்வாறான  வேடிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றம் செய்து வருவதை மக்கள் பார்த்துதான் வருகின்றனர். நீதிமன்றத்தின் இழுத்தடிப்புக்கு மற்றொரு சான்றை பார்க்கலாம்.
 
 கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேல்துரையும், அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியனும் போட்டியிட்டனர். அதில், வேல்துரை 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
 
அதில் வேட்பு மனுதாக்கலின்போது வேல்துரை தமிழக அரசுடன் ரோடு போடுவதற்கான ஒப்பந்தம் செய்து இருந்தார், தேர்தலில் போட்டியிடும் ஒரு நபர் அரசுடன் தொழில் ரீதியாக  தொடர்பு வைத்துக்கொள்ளவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 9 ஏ-ன்படி குற்றமாகும். அவ்வாறு தொடர்பு வைத்தால், தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை கடந்த 2009-ம் ஆண்டில் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மனோஜ் பாண்டியன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பன்சால், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தங்களது தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
 
இந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், வேல்துரை எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். மேலும், அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
 
வேட்பு மனுதாக்கல் செய்தபோது வேல்துரை எம்.எல்.ஏ. தமிழக அரசுடன் தொழில் ரீதியான ஒப்பந்தம் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தெரிவித்துள்ளனர்.  
 
2006 தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவரது வெற்றி குறித்த வழக்கு, அவர் முழுமையாக ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து முடித்து, அடுத்த தேர்தலை  சந்திக்கும் நிலையில் அவரது வெற்றி செல்லாது என அறிவிப்பதால் என்ன பலனிருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது? சம்மந்தப்பட்ட வேல்துரை, வேட்பு மனுதாக்கலின்போது தமிழக அரசுடன் ரோடு போடுவதற்கான ஒப்பந்தம் செய்து இருந்தார் என்பதுதான் அதிமுக வேட்பாளரின் குற்றசாட்டு. இந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என நீதிமன்றம் கண்டுபிடித்து தீர்ப்பளிப்பதற்குள் அந்த எம்.எல்.ஏவின் பதவிக்காலமே  முடிந்து விட்டது  என்றால், இந்த வழக்கை தாக்கல் செய்த  அதிமுக வேட்பாளருக்கு என்ன பலன்? சம்மந்தப்பட்ட காங் எம்.எல்.ஏ வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் சொல்லி விட்டதால், அடுத்த இடத்தில் இருந்த அதிமுகவின் மனோஜ்பாண்டியனை சட்டமன்ற உறுப்பினர் என்று அறிவிக்கப் போகிறதா நீதிமன்றம்? இதில் பாதிக்கப்பட்ட மனோஜ்பாண்டியனுக்கு நீதிமன்றம் தரும் பரிகாரம் என்ன?
 
இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த காங் எம்.எல்.ஏ வேல்துரையின்  வெற்றி செல்லாது என நீதிமன்றம் சொல்லியுள்ளதோ அதே  வேல்துரை தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தேர்தலும்  முடிந்துள்ளது. ஒருவேளை இவர் ஜெயித்தால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிவிடுவார். அப்படியானால் ஏற்கனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 9 ஏ வை இவர் மீறிய விஷயத்திற்கு என்ன தண்டனை..? பாமரனுக்கு புரியல. படிச்சவுக சொன்னா தேவலை.

எங்கே செல்லும் இந்த பாதை????????????




ஒப்பற்ற  ஓரிறையின் திருப்பெயரால்... 

அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மமகவை ஆதரித்து நாம் நிறைய ஆக்கங்கள் வரைந்தோம். அரசியலில் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் வாக்கு பதிவு முடிந்த மாத்திரமே பக்கா அரசியல்வாதியாக மாறிவிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ். இன்று மரணத்தை தழுவிய கடவுள்[?] சாய்பாபாவின் மரணத்தையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர்.அதை கீழே படியுங்கள்; 

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக  வாதியாக மட்டுமல்லாது   நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து  700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார்.

கல்வி உதவிகள்,  மருத்துவ உதவிகள்  மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 
மேற்கண்டவாறு அறிக்கையில்  கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் அவனுக்காக துஆ செய்வதும், கணவன் நீங்கலாக யாருக்காவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது  என்பதும் இஸ்லாம் நமக்கு கட்டிய வழிமுறையாகும். அதே நேரத்தில் ஒரு இணைவைப்பாளர் மரணித்து விட்டால் அவருக்காக நாம் பிரார்த்திக்கவோ, வேறு காரியங்களை ஆற்றுவதற்கோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் சாய்பாபா தன்னை கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் காட்டிக் கொண்டவர். சில அற்புதங்களை[?] செய்து காட்டி தன்னை வழிபடும் கூட்டத்தை உருவாக்கியவர். சாய்பாபாவின் பக்தர்களுக்கு அனுதாபம்  தெரிவிப்பதன் மூலம் சாய்பாபாவை கடவுள் என நம்பும் அவரது பக்தர்களின் சித்தாந்தத்தை அங்கீகரிக்கிறது மமக. மேலும் சாய்பாபா சமூக சேவகர் என்று புகழாரம்  சூட்டுகிறது மமக. அப்படியே இருக்கட்டும் சாய்பாபாவின் சமூக சேவை மறுமையில் அவருக்கு பயனளிக்கும் என்கிறதா மமக? இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்; 
ذَلِكَ هُدَى اللّهِ يَهْدِي بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُواْ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُواْ يَعْمَلُونَ
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.[6:88 ]
இறைமறை இவ்வாறு கூற, அதற்கு நேர் மாற்றமாக புகழ்மாலை சூட்ட மமகவுக்கு ரொம்பவே துணிச்சல். முஸ்லிம் கட்சி, சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று மமகவுக்கு குறிப்பாக இந்த அறிக்கை வெளியிட்ட ஜவாஹிருல்லாஹ்விற்கு அறிவுறுத்துகிறோம்.

திங்கள், 25 ஏப்ரல், 2011

எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம்





எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம் மீனவர்கள் கொல்லபடுகிறார்கள் என்று அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி விட்டது. உலக கோப்பை போட்டியில் இலங்கை நம்மிடம் தோத்ததற்கு நான்கு மீனவர்களை கொன்று வெறியை தீர்த்து கொண்டது . வழக்கம் போல் நிருபமா வருத்தம் தெரிவித்தாகி  விட்டது . பிரெச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறதாம் .ஹி ஹி .வேற என்ன புடுங்க முடியும் ..இன்னும் நாற்ப்பது பேரை கொன்றாலும் இன்னும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருப்பார்கள்.பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து  அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் மங்குனி சும்மாதான் இருக்காரு .

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு: முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு!

டெல்லி: 17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIESஎன்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது “இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும், இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும், கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன. ஆனால், உண்மை எதுவெனில்,மைசூர் மன்னன் மாவீரன் திப்பு சுல்தான் 153 கோயில்களுக்கு மானியம் கொடுத்துள்ளார்.மேலும் சமஸ்கிருதம்- உருது மொழி இணைந்த இந்திய கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.ஆனால் அதனை மறைக்க முகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி என்று கூறினார்.” தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சு உச்ச நீதி மன்றத்திலும் வெளிப்படவேண்டும். ராமர் கோயிலை இடித்து தான் பாபர், பள்ளிவாசல் கட்டினார் என்ற வாரலாற்று திரிப்பை உடைக்க மார்கண்டேய கட்ஜு முன்வரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அயோக்கிய தீர்ப்பை ரத்து செய்து, உச்ச நீதி மன்ற தானாக இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி-27 அன்று சென்னையிலும் மதுரையிலும் பல லட்சக்கணக்கான மக்களை திரட்டி TNTJ பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அஜ்மல், கோவை
source: www.tntj.net 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சென்னையில் 10 நிமிடத்தில், 50 சதவீத நெரிசலைக் குறைப்பேன் - சாகுல் ஹமீது!

சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆர்வமுடன் களமிறங்கியுள்ள சாகுல் ஹமீது சென்னை சாலைகளில், 13 ஆண்டுகளாக பழச்சாறு வியாபாரம் செய்கிறேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இங்குள்ள அனைத்து சாலைகளும் எனக்கு அத்துப்படி. ஒவ்வொரு சிக்னல்களிலும், மணிக்கணக்கில் ஆய்வு செய்திருக்கிறேன். 

சென்னை போக்குவரத்தை சீராக்க, ஆயிரக்கணக்கான வரைபடங்கள் தயாரித்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஜெராக்சிற்கே செலவு செய்துள்ளேன். சொந்தப் பணத்தில், பாங்காங், மலேசியா, சிங்கப்பூர் சென்று, அங்குள்ள போக்குவரத்து விதிகளை ஆய்வு செய்துட்டு வந்தேன். நான் ஒரே ஆளாக இத்தனை வருடம் செய்த விஷயங்களைப் பற்றி, விசாரிக்கக் கூட இங்கு ஆள் இல்லை. நான் டிராக்பிக் போலீசாரை குறை சொல்லவில்லை. அவர்களை நெறிப்படுத்திக்க, அவர்களிடம் எந்த ஐடியாவும் இல்லை. என்னிடம் நிறைய ஐடியாக்கள் உள்ளன; ஆனால், கேட்கத் தான் ஆள் இல்லை. தேவையற்ற சிக்னல்கள், 35 சதவீத சாலைகளை, ஒரு வழிப்பாதையாக மாற்றியது, மாநகர பஸ் ஓட்டுனர்களின் ஒழுங்கீனம் ஆகியவை தான், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணங்கள். நான் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, என் யோசனைகளைக் கேட்க போலீஸ் மறுக்கிறது...



இதற்காக, ஐகோர்ட் படியேறினேன். என் யோசனைகளைக் கேட்க வேண்டும் என உத்தரவு வந்து, ஒரு வருடமாகிறது. இன்னும் என் யோசனைகளைக் யாரும் கேட்கவில்லை. நான் சவால் விடுகிறேன்... சென்னையில், எந்த இடத்தில் டிராபிக் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றாலும், நான் குறைத்துவிடுவேன். 10 நிமிடத்தில், 50 சதவீத நெரிசலைக் குறைப்பேன். அண்ணா மேம்பாலத்தில், வண்டியே நிற்காத அளவுக்கு செய்து காட்டுகிறேன். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், என் யோசனைகளை அங்கீகரித்தால்... இது சாத்தியம்!

புதன், 20 ஏப்ரல், 2011

விண்டோஸ் இயங்குதளம் ஏழில் (7) - எவ்வாறு உருவங்களால் உண்டாகிய மேமொரியை

நம் கணினியில் நாம் அன்றாடம் உபயோகிக்க படுத்தும்போது அதில் உள்ள மேமொரிகள் நம்முடைய பயன்பாட்டை பொருத்து குறைந்து கொண்டே செல்லும், இதனால் தான் நம்முடைய கணினி வேகம் குறைந்து செயல்பட கூடிய நிலைமைக்கு வரும், அதனை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் இந்த விண்டோஸ் இயங்குதளத்தில் பல வழிகள் உண்டு, அதில் ஒன்று தான் இந்த

 "Windows 7 - Clean the thumbnail cache"

Procedure:
  • The thumbnail cache can be cleaned via the "Disc Cleanup" utility:
  • Click on Start type "disc cleanup" in the search field and press Enter
  • Select the drive on which your OS is installed (by default C:)
  • Click on the Ok button and wait for the tool to index the files that require cleaning
  • In the disk cleanup utility check the box next to "Thumbnails".
  • Click on the OK button.

இதனை முயன்று பாருங்கள்....................முடிந்தால் கருத்தை ஒட்டு போடுங்கள்...............................

திங்கள், 18 ஏப்ரல், 2011

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?

நன்மையை உணர்வோம்...
நன்மையைப் பயில்வோம்...
நன்மைக்கே துணை புரிவோம்...
இஹ்ராமுடன் ஃகாபாவை வலம் வரும் (தவா ஃ ப் செய்யும்) பெண்களுக்கெல்லாம் இதே (முகம் மூடக்கூடாது) சட்ட நிலைதான் இன்றும் பேணப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பிற்காக இடப்பட்ட இந்த (முகம் மட்டும் மூடக்கூடாது) ஆணையிலும் தவறே இல்லை.


ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது" என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.

இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. இந்த சட்டத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்திலுள்ள இந்த இரண்டு வகைகள்தான் :





இவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.

ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!


ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ெபட்ேராலுக்கு குட்ைப காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு ேகாைவ கல்லூr மாணவர்கள் அசத்தல்

ெபாள்ளாச்சி-: சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வைகயில் காற்றில் இயங்கும் காைர, ேகாைவ கல்லூr
மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ெபட்ேரால் விைல உயர்வு, காrன் விைல அதிகம், சுற்றுச்சூழல்
மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்ைன களுக்கு ேகாைவ கருமத்தம்பட்டி தமிழ்நாடு ெபாறியியல் கல்லூrயில்
ெமக்கானிக்கல் இன்ஜினியrங் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர்.
இதுகுறித்து ெபாள் ளாச்சி பாலக்காடு ேராட்ைட ேசர்ந்த சந்திரேசகரன் என்பவrன் மகன் மதன்குமார்
(21) கூறியதாவது: நானும், என்னுடன் ெமக்கானிக்கல் இன்ஜினியrங் இறுதியாண்டு படிக்கும்

நசியனூைர ேசர்ந்த பூர்ணசந்திரன், ேபரூைர ேசர்ந்த ஆனந்தன், ேகாைவ சிங்காநல்லூைர ேசர்ந்த
சுேரந்தர் ஆகிய 4 ேபரும் படிப்பால் நமது வாழ்க்ைக தரம் உயருவது மட்டுமின்றி, இந்த
சமுதாயத்துக்காக எைதயாவது ெசய்ய ேவண்டும் என்ற எண்ணத்தில் இருந்ேதாம்.
இன்று உலகம் முழுவதிலும் மக்கைள ெபrதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபடுவதுதான்.
மாசுபாட்ைட குைறக்க நமது பங்களிப்பும் இருக்க ேவண்டும் என்று முடிவு ெசய்ேதாம். இதற்காக
காற்றில் இயங்கும் மிகக் குைறந்த விைலயில் கார் தயாrப்பதற்கான முயற்சிைய கடந்த ஆண்டு
டிசம்பர் இறுதியில் ெதாடங்கிேனாம். இதற்கு கல்லூr ேபராசிrயர் திருப்பூர் நாகராஜன் மிகவும்
உறுதுைணயாக இருந்தார். 3 மாதம் இைடவிடாத முயற்சியின் காரணமாக ண3ீ 5,000 ெசலவில் ஒருவர்
மட்டும் அமர்ந்து ெசல்லும் விதத்தில் ஒரு காைர வடிவைமத்ேதாம். இந்த காrல் 300 பவுண்ட் காற்று
ெகாள்ளளவு ெகாண்ட ெபrய ேடங்க் ஒன்று ெபாருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன்
ெவளிேயறும் காற்று இன்ஜிைன இயக்குவதன் மூலம் கார் ெசல்லும்.
வழக்கமான கார்கைளப் ேபான்ேற இதில் கியர், கிளட்ச், பிேரக் உள்ளிட்டைவ ெபாருத்தப்பட்டுள்ளன.
இதில் இருந்து புைகயும் வராது, சுற்றுச் சூழலும் மாசுபடாது. நாம் ெசல்லும் வழியில் எங்காவது ஒரு
ைசக்கிள் கைடயில் நிறுத்தி காrன் ேடங்கில் காற்ைற நிரப்பிக் ெகாண்டு நம் பயணத்ைத ெதாடரலாம்.

புதன், 13 ஏப்ரல், 2011

இந்தியா உலககோப்பை வென்றது எதற்காக ?

கடந்த வாரத்தில் இருந்து வலைபதிவில் அதிகம் நான் படித்து இந்த பலைபோன உலககோப்பையை பற்றிதான்.......................அதை பற்றின பதிவுதான் இது என்றாலும் சற்றே வித்தியாசமானது.........


அதாவது மும்பை மாடல் அழகி பூனம் பண்டே உலககோப்பை இறுதி ஆட்டத்திற்கு முன் அறிவித்திருந்தார், இந்தியா  உலககோப்பை வென்றால் நான் நிர்வாணமாக காட்சியளிப்பேன் என்று..............பின்னர் இவர்கள் வென்ற பின்னர் இல்லை என்று மறுத்தார்...................மறுபடியும்...............நான் இந்திய வீரர்கள் முன்னர் மட்டுமா அவ்வாறு காட்சியளிப்பேன் என்றார்................இப்பொழுது நான் தயார் அனால் பீசீசீ மறுத்துவிட்டனர் என்கிறார்...............இதை பற்றி நம்முடைய வீரர்களின் கருது என்னவென்று பாப்போம்............

டெண்டுல்கர் 
நிருபர்: இருபது வருடம் போராடி எப்படியோ ஒரு கோப்பையை வாங்கிடீங்க..........இந்த வெற்றியே எப்படி கொண்டடபோறிங்க?
டெண்டுல்கர்: எங்கத்த கொடடுறது.........................அதான் எல்லாத்தையும் இந்த பீசீசீ கெடுதுட்டான்களே..............நானும் எப்படியாவது பார்த்துடலாம்னு இருந்தேன்......................கடைசிலே காப்பு வாங்கிட்டோம்...................ஆனால் வடை போச்சே.........................

மற்றவர்கள் 







மறக்காமே உங்களுடைய பொன்னான ஓட்டுகளை குத்தவும்............................இல்லை கமெண்ட்ஸ் ஆவது எழதுங்க....................

திங்கள், 11 ஏப்ரல், 2011

இந்திய கிரிக்கெட் சில சகிக்க முடியாத வக்கிரங்கள்

கிரிக்கெட் என்றாலே எனக்குப் பல விசயங்களில் பற்றிக் கொண்டு வரும். அதில் சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன். 

"Indian team penalized by animal activists for hunting 11 Kangaroos last thursday, and to pay penalty by hunting 11 street dogs for today. Jai hind." 

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மானம் கெட்ட மக்கள் கட்சியை ஏன் ஆதரிக்க கூடாது??????????


தமிழகத்தில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் தேர்தல் புயல் அடித்து கொண்டிருகிறது. அதிலும் நம் முஸ்லிம் மக்களுக்கிடையில் பார்த்தால் சுனாமியே அடிக்கிறது என்றால்  அது மிகையாகாது. இதில் குறிப்பாக இரண்டு பெரும் இயக்கங்கள்..................ஒன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் மற்றொன்று மனித நேய மக்கள் கட்சி எனும் மானம் கெட்ட மட்டமான கட்சி. இந்த இரண்டு கட்சிக்கும் என்ன வித்தியாசம்னு பார்த்தால், ததஜ செயல்பாடுகள் அனைத்தும் குரான் மற்றும் ஹதீஸ் இவைகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும், இதற்க்கு நேர் மாற்றமாக இந்த மமக..................இவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இந்த குரான் மற்றும் ஹதீஸ் தான் என்று கூறியதால் இந்த ததஜ உருவானதற்கு காரணம். சரி இதெல்லாம் பழைய கதை இப்போதைய நிலைமை என்னவென்று பார்ப்போம்.............



ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சிய கருணாநிதியின் ரூ:3 இலட்சம் கோடி கிரானைட் ஊழல்: தினபூமி குற்றச்சாட்டு


தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினபூமி நாளிதழ் 3 இலட்சம் கோடி ஊழல் மோசடியில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. தினபூமி வெளியிட்ட செய்தி கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

சனி, 9 ஏப்ரல், 2011

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சுனாமியை ஒரு அத்தாட்சியாக எடுத்துக்கொள்வோமாக! மறுமையை உறுதியாக நம்பி, இம்மை வாழ்வைச் சீர்திருத்திக்கொள்வோமாக!

உலகம் அழியுமா? இது என்ன கதை?
என வரலாறு நெடுகிலும் சில அதிமேதாவிகள் அதிரடி வினாத் தொடுத்து வந்துள்ளனர்.

உலக அழிவுக்கான அடையாளங்களாகவும், அத்தாட்சிகளாகவும் பல அழிவுகள் நிகழ்த்தப்பட்டு இருப்பதை இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது. வெள்ளப்பெருக்கு, பூமியதிர்ச்சி, பேரிடி, புயற்காற்று, கல்மாறி எனப் பல அடிப்படைகளில் அக்கிரமக்காரக் கூட்டத்தார் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் அழிவுகள் பலவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாக இருந்துள்ளன.

படைத்தவன் ஒருவன் இருக்கின்றானென்பதை மனிதன் மறந்து அல்லது மறுத்து நடக்கும் போது சில அழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்துகின்றான் அல்லாஹ்!

மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சியும், சுனாமியும் தாக்கியது. இவற்றின் விளைவாக ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் இயந்திரங்கள் செயலிழந்து போக அணு உலைகள் சூடேறி வெடிக்க ஆரம்பித்துள்ளன. சுனாமி தாக்குதல், பூமியதிர்ச்சி என்பன ஜப்பானுக்குப் பழகிப் போன அம்சங்களாகும். ஆனால், ஜப்பானின் அணுக் கசிவு என்பது ஜப்பானை மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஜப்பானின் அண்டை நாடுகள் பீதியில் உறைந்து போயுள்ளன.

அணுக் கசிவாலேற்படும் பேரழிவைத் தடுக்க விஞ்ஞானிகள் பெரிதும் போராடி வருகின்றனர். இதில் முன்னேற்றமும் தெரிகின்றது.

இந்த முயற்சி தோல்வியுற்றால் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஏற்பட்டதை விட அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆக்கச் சக்திக்காக மட்டுமன்றி அழிவுச் சக்திக்காகவும் அணுச் சக்தி பயன்படுத்தப்படுகின்றது. அண்டை நாடுகளை அச்சமூட்டுவதற்காகவும், தன்னை அணு வல்லமை பெற்ற நாடாகக் காட்டிக்கொள்வதற்காகவும் ஒவ்வொரு நாடும் அணு குண்டுத் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த அணு உலைக் கசிவைத் தொடர்ந்து அணு உலைகள் குறித்த அச்சம் சகல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் ஜப்பானின் தொழில் நுட்பத்தின் கதியே இதுவென்றால் சாதாரண நாடுகளின் அணு உலைகள் இது போன்ற பேரழிவுகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியவைதானா என்ற ஐயம் பல நாடுகளிலும் எழுந்துள்ளது.

அயல் நாடுகளை அச்சமூட்டும் முயற்சி இப்போது உள்நாட்டு மக்களின் வயிற்றிலேயே புளியைக் கறைத்துள்ளது. சுமார் 32 நாடுகளில் 450 அணு உலைகள் இயங்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக அணு உலைகள் கடற்கரைப் பிரதேசங்களில்தான் அமைக்கப்படும். ஜப்பான் அடிக்கடி சுனாமி மற்றும் நில நடுக்கத்துக்கு உள்ளாகும் நாடாகும். ஜப்பானில் நிறுவப்பட்ட அணு உலைகள் 7.0 றிச்டர் அளவுக்குக் குறைவான பூகம்பங்களை மட்டுமே தாக்குப் பிடிக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டதாகும்.

இந்த அடிப்படையில் மேற்படி அளவுக்கு அதிகமான றிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் ஜப்பானிய அணு உலைகளால் பாரிய ஆபத்து ஏற்படலாமென 2008 களில் சர்வதேச அணுச் சக்தி அமைப்பு ஜப்பானை எச்சரித்து இருந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமொன்று குறிப்பிடுகின்றது.

அணு உலைகள் மிகப் பாதுகாப்பாகத்தான் அமைக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்துக்கும் மேலால் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை அடிக்கடி நிகழும் நிகழ்வுகள் நிரூபித்த வண்ணம் உள்ளன.

ஜப்பானிய அணு உலைக் கசிவு என்பது உலகு சந்திக்கும் நான்காவது அணுக் கசிவு ஆபத்தாகும். 1969ல் சுவிட்ஸர்லாந்தின் லு சென்ஸ் அணு உலையும், 1979ல் அமெரிக்காவின் த்ரிமைல் தீவு அணு உலையும், 1986ல் ரஷ்யா உக்ரைனின் செர்னோபில் அணு உலையும் வெடித்தன. இவற்றின் பாதிப்புகளுக்கு அந்தந்த நாடுகள் மட்டும் அன்றி அயல்நாடுகளும் உள்ளாகின.

இன்றும் கூட இவற்றின் பாதிப்புகள் நீங்கியதாக இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானில் போட்ட இரு அணு குண்டுகளின் தாக்கம் இன்றும் கூட இருக்கின்றது. இந்த வகையில் அணுக் கசிவு ஆபத்து என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத அழிவாகும்.

தற்போது உலகு சந்தித்துக்கொண்டிருக்கும் நான்காவது அணுக் கசிவாக ஜப்பான் ஷடாய்ச்சா அணுக் கசிவு| இருக்கின்றது. உலகில் இயங்கி வரும் அணு உலைகளில் மிகப் பாதுகாப்பானவையாகக் கருதப்பட்டது டாய்ச்சா அணு உலைகளே! அதன் நிலையே இதுவென்றால் மற்ற 450 அணு உலைகளின் நிலை என்னவென்பது இன்றைய உலகு சந்திக்கும் மிக முக்கிய கேள்வியாகும்.

இதில் சிந்திக்க வேண்டிய அம்சம் என்ன என்றால், ஜப்பான் பூகம்ப பூமியென்பதால் கடுமையான பூகம்பம் ஏற்பட்டால் அணு உலைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா? என டாய்ச்சா அணு உலை அமைக்கப்படும் போது வினவப்பட்டது.

அப்போது, ‘இந்த அணு உலையை அசைக்கக் கூடிய அளவுக்கு பெரும் நில நடுக்கம் ஏற்படாது!’ என ஜப்பான் அரசு பதிலளித்தது.

மனிதன் என்னதான் தொழில் நுட்பத்தில் முன்னேறினாலும் தனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை மறந்து பேசலாகாது.

டைட்டானிக் கப்பலைத் தயாரித்தோர் ‘கடவுளால் கூட இந்தக் கப்பலை ஒன்றும் செய்ய முடியாது!’ என அதன் தொழில் நுட்பம் குறித்துப் பேசினர். முதல் பயணத்திலேயே உலகுக்குச் சோகம் மிக்க அழிவை அது தந்தது.

தனது தோட்டம் அழிவைச் சந்திக்காது எனப் பெருமையாகப் பேசிய ஒருவரது தோட்டம் அழிக்கப்பட்டது குறித்து சூறா அல்கஃப் பேசுகின்றது. எனது செல்வமெல்லாம் எனது அறிவால் நான் தேடியவை என கர்வத்துடன் நடந்த காரூன் பூமியால் விழுங்கப்பட்டான் என குர்ஆன் கூறுகின்றது.

ஜப்பானின் நிகழ்வு சோகமானது என்றாலும் இந்த நிகழ்வு மூலம் படைத்தவனை மறந்து மனிதன் வாழலாகாது என்ற படிப்பினையை உலக சமூகங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுனாமியும் அத்தாட்சியே!
உலக நாடுகள் பலவும் சுனாமி ஆபத்தை வரலாறு நெடுகிலும் சந்தித்துள்ளன. எனினும், அடிக்கடி சுனாமியைச் சந்திக்கும் நாடு ஜப்பானாகும். ஷசுனாமி| (வுளரயெஅi) என்ற சொல்லும் ஜப்பான் மொழிச் சொல்லாகும்.

1700 களில் இருந்தே பல நாடுகளை சுனாமி தாக்கி வந்தாலும், சுனாமியைப் பற்றிய அறிவு பொதுவாக பொது மக்களிடமோ, படித்தோரிடமோ இருக்கவில்லை. எனினும், 2004 டிஸம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமிப் பேரிடர்தான் சுனாமி குறித்து அகில உலகும் அறிய வழி செய்ததெனலாம். ஒன்று, இதன் இழப்பு 2 இலட்சங்களைத் தாண்டியிருந்தது. அடுத்தது, ஊடகத் துறை முழு வளர்ச்சி பெற்றுக் காணப்பட்டதால் இந்தச் சுனாமி அழிவுகளை உலகம் நேரடியாகப் பார்ப்பது போல் ஊடகங்கள் வழியாகக் கண்டு கலங்கினர்.

எனவே அதன் பின் சுனாமி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக மாறி விட்டது. இந்தச் சுனாமி அழிவுகள் மறுமை நிகழ்வை ஞாபகமூட்டும் அம்சங்களாகத் திகழ்கின்றன.

உலக அழிவு நெருங்கும் போது பூகம்பங்கள் அதிகரிக்கும் என்பது நபிமொழியாகும். (புகாரி 7121)

இந்த அடிப்படையில் சுனாமிகளும், பூமி அதிர்வுகளும் மறுமைக்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

உலக அழிவு நிகழும் போது ஏற்படும் நிகழ்வுகள் குறித்துக் குர்ஆன் பல செய்திகளைப் பேசுகின்றது.

‘மனிதர்களே! உங்கள் இரட்சகனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்வு மிகக் கடுமையானதாகும்;.’ (22:1)

‘சூரியன் சுருட்டப்படும் போது,’
‘நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது,’
‘மலைகள் பெயர்க்கப்படும் போது,’
‘கர்ப்பமுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப் படும் போது,’
‘வனவிலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,’
‘கடல்கள் எரியூட்டப்படும் போது,’ (81:1-6)

உலக அழிவின் போது தாய் தன் பிள்ளையை மறந்து விடுவாள். விலை மதிக்க முடியாத பொருட்கள் எல்லாம் கேட்பார்-பார்ப்பார் இல்லாது விடப்பட்டு விடுமெனக் குர்ஆன் கூறுகின்றது. மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த வசனங்கள் கூறுகின்றன.

கோடிக் கணக்கான பெறுமதி வாய்ந்த வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் எல்லாம் குப்பை-கூலங்களாகக் காட்சி தருவதை ஜப்பானில் காணலாம்.

உலக அழிவின் போது கடல் மாற்றம் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது;

‘கடல்கள் எரியூட்டப்படும் போது,’ (81:6)
‘கடல்கள் பிளக்கப்படும் போது,’ (82:3)

மேற்படி வசனங்கள் உலக அழிவின் போது கடல்கள் குமுறும் என்றும், கடல்கள் தீ மூட்டப்படும் என்றும் கூறுகின்றன. சுனாமிகள் கடலின் குமுறலின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றன.

சுனாமி அலைகள் தரையில் பாய்ந்து சுருட்ட வேண்டியதையெல்லாம் சுருட்டிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்லும் காட்சிகளை நாம் கண்களால் காண்கின்றோம். இந்தக் கடல், மழை, வானம், பூமி அனைத்தும் ஒருவனின் கட்டளைக்குப் பணிந்தே ஒரு ஒழுங்கில் இயங்கி வருகின்றன. அவன் நினைத்தால் எந்த நிமிடமும் இந்த ஒழுங்கை மாற்ற முடியும்.

அவன் இந்த ஒழுங்கில் சின்னதோர் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அதன் பாதிப்பென்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை என்பதை மனிதன் உணர வேண்டும். இந்த சுனாமிப் பேரழிவால் கட்டிடங்கள் நொறுங்கிப் பலம் வாய்ந்த பல அம்சங்கள் அல்லுண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை, நாட்கள் பல தாண்டியதன் பின்னரும் 80 வயது மூதாட்டியும், அவரது பேரப் பிள்ளையும் உயிருடன் மீட்கப்படுகின்றனர். நான்கு நாட்கள் தாண்டியும் நான்கு மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்படுகின்றது என்றால் மனிதனது கற்பனைகள், தர்க்கவியல் சிந்தனைகளுக்கு அப்பாலும் ஒரு சக்தி இருந்து காரியங்களை இயக்கிக்கொண்டிருப்பதை அறிய முடியும்.

இது தொழில் நுட்ப யுகம்!
அறிவியல் யுகம்!
மனிதனால் அறிவால் இயற்கையை வென்று விட்டான்! என்றெல்லாம் பேசப்படுகின்றது.

ஜப்பான் தொழில் நுட்பத்தின் தாய் வீடாகும். அது தொழில் நுட்பத்தில் உச்சத்திலிருக்கும் நாடு. சுனாமி தற்பாதுகாப்புக்கான பல ஏற்பாடுகள் அந்த நாட்டில் இருக்கின்றன.

இருப்பினும், இந்தப் பாரிய பேரழிவுக்கு அது முகம் கொடுத்துள்ளது என்றால் அறிவாலும், விஞ்ஞானத் தொழில் நுட்பத்தாலும் இயற்கையை மனிதன் வெற்றி பெற்றான் என்ற குப்ரான கோஷத்தின் போலித் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

இது வரை நாம் கூறிய கூற்றுகள் ஜப்பானியர் அல்லாஹ்வின் கோபத்துக்கு உரியோர் என்பதைக் கூறுவதற்கான தகவல்கள் அல்ல. பொதுவான அழிவுகள் தீயவர்களுக்கு அழிவாகவும், அதில் அகப்பட்டுக்கொள்ளும் நல்லவர்களுக்கு அருளாகவும், தப்பித்தவர்களுக்குப் பாடமாகவும், சோதனையாகவும் திகழ்கின்றன.

எனவே, சுனாமியை ஒரு அத்தாட்சியாக எடுத்துக்கொள்வோமாக! மறுமையை உறுதியாக நம்பி, இம்மை வாழ்வைச் சீர்திருத்திக்கொள்வோமாக!

வியாழன், 7 ஏப்ரல், 2011

அறிந்து கொள்வதற்காக மட்டும்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.

தர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது.

சில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது
"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார்.

முபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி(??) அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் "முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்" என்கின்றார்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, "(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று"

அவர் மேலும் கூறுகையில், "நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்".

பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் சலபி(??) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.

தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,

1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)

2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)

தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?

3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)

4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)

5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)

6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)

இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

ஆக்கம் சகோ ஆஷிக் அஹமத்

புதன், 6 ஏப்ரல், 2011

இந்திய கிரிக்கெட்.....இப்படி நடக்குமா..? இது சாத்தியம் ஆகுமா..?

இந்தியாவில் அந்த "உலகப்பற்று" எண்ணத்தை ஏற்படுத்த ஒரே ஒரு அமைப்பால்தான் இயலும்..! அது... BCCI..! (இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட்டை ஆளும் தனியார் வாரியம் -Board of Control for Cricket in India- என்றுதான் பெயர்..! ஆனால், பெயருக்கு மாறாக, உலகில் உள்ள அத்தனை கிரிக்கெட்டையும் தன் பண பலத்தால் ஆளுகிறது..! தான் நினைத்ததை சாதிக்கிறது..!) 

'அது எப்படி உலகப்பற்றை மக்களிடம் உயிர்ப்பிக்கும்' என்று சந்தேகம் இருக்கிறதா..? அதற்கு அவசியமே இல்லை...! அது ஏற்கனவே நம் நாட்டு மக்களுக்கு "தேசப்பற்று" என்ற ஒன்றை மனதில் நன்கு ஆழமாய் உருவாக்கி, அடுத்து "உலகப்பற்று" என்ற ஒன்றையும் உருவாக்கும் ஓர் உயரிய குறிக்கோளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

திங்கள், 4 ஏப்ரல், 2011

NO COMMENTS - சச்சின் டெண்டுல்கர்

NO COMMENTS

கோடி கோடியாக கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்ன சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலககோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் ஷாம்பெயின் பாட்டிலை குலுக்கிக்கொண்டு பீய்ச்சி அடித்ததும், கோடிக்கணக்கானோர் பார்த்துகொண்டிருக்கும்போது குடித்துகொண்டிருந்ததும் கண்கொள்ளாகாட்சி..ஹ்ம்ம்ம்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்



ஒரு காலத்தில் தமிழர்களின் பொழுதுப்போக்கு திரைப்படங்கள் சார்ந்தவையாகத் தான் இருந்தது. ஆனால் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் மக்களின் அன்றாடப் பொழுதுப் போக்கு தொலைக்காட்சிகள் சார்ந்தவையாக மாற்றம் பெற்றன. இவற்றில் பெரும் பங்குபற்றுபவை மெகாசீரியல்கள் எனப்படும் நெடுந்தொடர். ஆரம்பக் காலத்தில் நெடுந்தொடர்களின் கதைக்கருக்கள் மக்களை கவர்பவையாக இருந்தன, பல நெடுந்தொடர்கள் டிடி, சன்டிவிகளில் ஒளிப்பரப்பானவை சினிமாத் தனம் சார்ந்தவையாக இருந்தன. அவற்றின் நோக்கம் மக்களை சினிமாவில் இருந்து தன்வசம் திருப்பவையாகவே இருந்தன. அதனால் அவற்றின் தரம் உயரந்தவையாக இருந்தன, கையளவு மனசு, மர்மதேசம், கங்கா யமுனா சரஸ்வதி என பல தொடர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவைகள். பல மொழிமாற்று தொடர்களான அந்நியன், சீ ஹாவ்க், சாந்தி, ராஜா ராஞ்சோ, சக்திமான் எனப் பல தொடர்கள் மக்களால மறக்க முடியாதவைகள் ஆகும். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் மக்கள் சினிமாவை மறந்து தொலைக்காட்சிகளே கதி என மாற்றம் கண்டனர். இதன் பின்னரான தொடர்களின் வளர்ச்சி என்பதை விடவும் வீழ்ச்சிக் காலம் எனலாம். இதேக் காலக்கட்டத்தில் அதாவது 2001-க்குப் பின் திரைப்படங்களில் வளர்ச்சி அபரிவிதமாகவும், புதுமையாகவும் வெளிவரத் தொடங்கியது. இதேக் காலக்கட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் தனது கதைத் தரத்தை இழக்கத் தொடங்கியது. இருப்பினும் தொடர்கள் மீதான மக்களின் ஆர்வம் பெரிதும் குறைவுப் படவில்லை, இதனால் தொடர்களை தயாரிப்பவர்கள், இயக்குபவர்கள் மக்களைக் கவர்வதற்கு மட்டமான வழிமுறைகளைக் கைக் கொண்டனர்.


தற்சமயம் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான தொடர்களின் கதைக்கரு கள்ளக்காதல், கொலை, கொள்ளை, ரௌடித்தனம், பழிவாங்கல் இவற்றின் பின்புலத்திலேயே கதைகள் நகர்கின்றன. சினிமாவை விடவும் அன்றாடம் மக்களின் மனதில் ஒன்றிப்போவது சீரியல்கள் தான். ஆனால் இவற்றைத் தயாரிப்பவர்கள் சமூக அக்கறையின்றி தொடர்களை எடுத்து வருவது நிச்சயம் சமூகத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் சூழல் இருக்கின்றன. தற்சமயம் சண்டிவியில் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான தொடர்களில் கள்ளகாதல், கொலை இரண்டுமே மையம் கொண்டு இருக்கின்றது.

கள்ளக்காதலைப் பிரதானப்படுத்தும் சண்டிவியின் தொடர்களாக இருப்பவை கஸ்தூரி, செல்லமே, தென்றல், இதயம், முந்தானை முடிச்சு, தங்கம், மாதவி, அத்திப் பூக்கள் என அனைத்துமே ஒரே ரகமாகும். அதே போல அனைத்து பிற தொடர்களான திருமதி செல்வம், நாதஸ்வரம், மாதவி போன்ற தொடர்களும் எப்படிக் கொலைச் செய்வது, ரௌடித்தனம் செய்வது என்பதை முன்னிறுத்தி செல்கின்றன. இதே போக்கான தொடர்கள் தான் ஸ்டார் விஜயில் ஒளிப்பரப்பாகும் மஹாராணி, என் பெயர் மீனாட்சி ஆகிய தொடர்களின் கருவும் இதே நிலை தான்  என்றாலும் சன் டிவியைப் பார்க்கிலும் கொஞ்சம் பரவா இல்லை எனத் தோன்றுகிறது. இன்ன பிற தொலைக்காட்சிகளின் ஒளிப்பரப்பாகும் தொடர்களும் இதேப் போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.

குறிப்பாக இரவு வேளையில் ஒளிப்பரப்பாகும் தென்றல் தொடரில் மாமா வேளை செய்யும் மாமியார் பாத்திரமும், அடுத்தவள் புருஷனை வளைக்க நாக்கைத் தொங்கப் போட்டு அலையும் பெண்ணின் பாத்திரமும் வெறுப்பை ஏற்றுகின்றன. இந்த தொடர்களை எடுப்பவர்களுக்கு வேறு கதையே கிடைக்கவில்லையா ? இல்லை இதை தயாரிப்பவர்களும், இயக்குபவர்களின் வீடுகளில் நடப்பதைத் தான் கதையாக்கி தருகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. வெளிப்படையாக கேட்கிறேன் இந்த தொடர்களை எல்லாம் குடும்பத்தோடு அமர்ந்து எப்படிப் பார்ப்பது சொல்லுங்கள் ? விஜய் படங்களைக் காறித் துப்புகிறோம், வரைட்டி கேட்கிறோம், ஆனால் தொடர்களில் ஒரு மார்க்கமாக மட்டமான கதைகளை கொட்டித் திணிக்கின்றன இதை நாம் பேசுவதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை. இதனால் குழந்தைகள், இளையவர்களின் மனதில் வன்மத்தை விதைக்கின்றோம். இதன் பின் விளைவுகள் சமூகத்தில் எப்படி எதிரொலிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள் ? ஏற்கனவே கள்ளக் காதல் கொலை, ஆள் கடத்தல், கற்பழிப்பு என தமிழகம் படாத பாடு படுகிறது. இந்த நெடுந்தொடர்கள் மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதாக அமைகிறது. 

சண்டிவியில் பக்தி நாடகங்கள் என்ற பெயரில் நாகம்மா போன்ற நாடங்கள் மேலும் வெறுப்பை ஏற்றுகின்றன. ஆனால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மகான் தொடர் நன்மதிப்பைத் தரும் ஒரு தொடராக கருத முடிகிறது.

இவற்றைக் கண்டிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வலைப்பதிவர்களாகிய நாம் எதாவது செய்வது அவசியமாகின்றது?

நன்றி: கொடுக்கி