OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 30 டிசம்பர், 2010

குழந்தைகள் அதிசயம்


இன்று மக்கள் அதிகமாக கவலை படுவது குழந்தை இல்லை என்பவர்கள்தான், வசதி, வாய்ப்பு எல்லாம் அடுத்ததுதான். இரண்டு தினகளுக்கு முன் அமீரகத்தில், ஒரு எகிப்திய தம்பதியருக்கு ஒரு பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்து உள்ளன.

புதன், 29 டிசம்பர், 2010

மைக்ரோசாப்ட் வோர்ட் - பாடம் 1

அறிமுகம்
எதாவது நுண்பொருள் பற்றி பதிவு எழுதவேணும் அப்படிங்கிறது எனது ரொம்ப நாள் ஆசை, அதற்க்கு இதுதான் சரியான நேரம். அதற்காக நான் தேர்வு செய்துள்ளதான் இந்த மைக்ரோசாப்ட் வோர்ட். இது தெரிந்தவர்களுக்கு ஒரு சிறிய விசயமாக தோன்றாலாம், தெரியாதவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

14 வயதில் எம்.சி.ஏ படிப்பு – மாணவன் சாதனை!


கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.
9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம்  இவருக்காக வயது வரம்பை  தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒரு ஆண்டு காலத்திலேயே படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார்.  அல்ஹம்துலில்லாஹ்!
இவரை பற்றி தினமலர் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ:

நாகூர் தர்காவில் ரஜினிக்கு பிறந்தாள் பாத்திஹா !

 ஜின்னையும்இமனிதனையும் என்னைவணங்குவதற்காகவே தவிர(வேறு எதற்காகவும்) நான்படைக்கவில்லை.  (அல்குர்ஆன் 51 : 56)



வழிகேடுகளின் மொத்த உருவமாக திகழ்பவா்கள் அந்த வழிகேடுகளுக்குள்ளாக மீண்டும்இமீண்டும் வழிகேடுகளை செய்வதை அவதானித்திருப்போம்.

அந்த வகையில் இஸ்லாத்தில் இல்லாத கப்ரு வணக்கத்தை செய்யும் பரேலவி மதத்தினா் தங்களை ஒரு முஸ்லிமைப் போல் காட்டிக் கொள்வதும்இஅவர்களுக்கெதிரான ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் நாங்கள் கப்ருகளை வணங்கவில்லை ஸியாரத் தான் செய்கிறோம் என்று மழுப்பல் பதில்கள் சொல்லிக் கொண்டு அலைவதையும் நாம் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டுவருகிறோம்

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யைநொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.(இறைவனைப் பற்றி) நீங்கள்(தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.     (அல்குர்ஆன் 21 : 18)

கப்ரு வணக்கத்தை ஸியாரம் என்று வா்ணித்து வழிகேட்டிற்கு நபிவழிச் சாயம் புசுவதையே மேற்கண்ட வசனம் வண்மையாக கண்டிக்கிறது.


ரஜினியின் பிறந்த நாளும், நாகூர் தர்காவும்.

“பெண் பாதுகாகப்பட வேண்டியவள்”

மூன்றாவதாக:-
அலங்காரங்களை வெளியே காட்டாதீர்!
என இஸ்லாம் உத்தரவிடுகிறது:
ﭧ ﭨﮞ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.’(அல்குர் ஆன் 24:33)
இந்த தொடரில் வரும் அழகைக் காட்ட வேண்டாம்என்ற வசனத்திற்கு தப்ஸீர் கலை விற்பன்னர்கள் பின்வருமாறு பொருள் விரிக்கிறார்கள்:
1. முக அழகையும், உடல் அழகையும் காட்டுவது,
2.
ஆபரணங்களின் அழகைக் காட்டுவது,
3.
நடை உடை பாவனைகளால் பிறரை ஈர்த்து நிற்பது.
இவற்றுள் எதையும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவையாவும் ஹராமாக்கப்பட்டவை (தடுக்கப்பட்டவை) ஆகும்.
ஒரு பெண்ணின் உடல் முழுவதும் மறைக்கப்பட வேண்டியதாகும். அவள் தன் மேனி எழிலையோ, தலை முடியையோ, கால்கள், கழுத்து, நெஞ்சுப்பகுதியையோ தோள் பகுதியையோ வெளியே காட்டுவது மார்க்கப்படி குற்றமாகும்.
மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் ஸீனத்என்ற சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள் சிந்தனைக்குரியதாகும்.
இமாம் குர்துபீ(ரஹ்) கூறுகிறார்கள்.
அழகு என்பது இருவகைப்படும். ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையானது. இயற்கையான அழகு என்பது ஒரு பெண்ணின் எழிலைக் காட்டும் முகமாகும். செயற்கையான அழகு என்பது ஆடை ஆபரணங்களால் மேனியை அலங்கரித்துக் கொள்வதாகும்.
வேறு சில விரிவுரையாளர்கள்:
ஸீனத்என்ற சொல்லை உள் அலங்காரம், வெளி அலங்காரம் என இருவகைப்படுத்துகின்றனர்.
உள் அலங்காரம் என்பது, காதணிகள், கழுத்தணிகள், கொலுசுகள், தண்டைகள், பாதத்தில் பூசப்படும் மருதாணி போன்ற வர்ணனைகளை குறிக்கின்றன என ஹஜ்ரத் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
வெளி அலங்காரம் என்பது, மோதிரம், கண்ணிலே போடு;ம் சுர்மா போன்ற மைகள் என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும்,
முகம் இரு முன் கைகள்என ஹஜ்ரத் ஹஸன்(ரலி) அவர்களும் பொருள் தருகின்றார்கள்.
இவற்றை ஆதாரமாகக் கொண்டு வெளியே தெரியும் பகுதியைத் தவிரஎன்ற குர்ஆன் வசனத்திற்கு மேற் கூறப்பட்ட வெளி அலங்காரங்களைத்தவிர உள்ளவைகளை நீங்கள் மறைத்துக் கொள்ளுங்கள் என விளக்கம் தருகிறார்கள்.

திங்கள், 27 டிசம்பர், 2010

உட்கார்ந்து யோசிச்சது

ஒரு வடை கதை
15 வருடத்திற்கு முன் ஒரு வடை 1 ரூபாய், ஒரு கால் பண்ண 4 ரூபாய், இப்போ பார்த்த ஒரு கால் பண்ண 10 பைசாதான், ஆனால் ஒரு வடை 4 ரூபாய், என்ன ஒரு விஞ்சான வளர்ச்சி அடைந்து இருந்தாலும்வடை போச்சே.

சீரியஸா ஒரு மேட்டர் 
அழகான ஓவியம் என்று உலகே ரசிகிறது, நான் எப்படி புரியவைப்பேன் அது என் புகைபடமென்று
சீரியஸா பேசும்போது சிரிக்க கூடாது 

ஒரு பள்ளிகூடத்தில்  
வரலாறு வாத்தியார் விடுமுறையில் இருந்த சமயம், அந்த பள்ளிகூட அறிவியல் ஆசிரியர்  வரலாறு பாட பரீட்சைக்கு கேள்வி தாள் தயாரித்தார், பரிட்சையில் அதை பார்த்த மாணவர்கள் அப்படியே ஷாக் ஆகிடாங்க, ஏன் தெரியுமா, அவருடை கேள்வி "Describe Jhansy Rani with neat Diagram?" - முடியலை!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு மொக்கை,
ப்ளூ வுக்கும், பச்சைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? இது தெரியாதா, ப்ளூ ஆங்கில வார்த்தை பச்சை தமிழ் வார்த்தை, நீங்க உங்க பொது அறிவை இன்னும் வளர்க்கணும் . 

ஜொள்ளு பார்ட்டி
ஒரு பொண்ணு ஒன்னு பஸ் ஸ்டாப் லே பஸ்க்கு காத்திருந்தது, வெயில் காரணமாக துப்பாடுவுளே அவ பாதி முகத்தை மூடி இருந்தா, இது தெரியாம ஒரு ஆளு அவ கிட்டே பொய் லிப்ட் வேணுமானா அதுக்கு அவ சொன்ன அய்யோ அப்பா இது நான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு குழப்பம்
சோம்பெரிதனம்தான்  நம்முடைய பெரிய எதிரி என்றார் நேரு அவர்கள். 
நாம எதிரிய நேசிக்க கத்துக்க வேண்டும் என்கிறார் நம்ம காந்தி  தாதா 
எப்படி குழப்புறாங்க பாருங்க...............

ஒரு ஹல்வா ஜோக் .
ஒரு இந்திய பிரஜை ஒரு அமெரிக்க காரனுக்கு ரத்ததானம் செய்தார் அதற்க்கு அவன் ஒரு கார் அன்பளிப்பு குடுத்தான். உடனே நம்ம ஆளு மறுபடியும், ஒரு முறை ரத்ததானம் செய்தான் பேராசையிலே, அதுக்கு அந்த அமெரிக்கன்காரன் திருப்பி இவனுக்கு ஹல்வாதான் குடுத்தான், கொய்யாலே நம்ம ரத்தமள்ளே   ஓடுது..........

மனிதன் ஒரு விளக்கம்,
மனிதன் என்னும் உயிரணம், அது மரங்களை வெட்டி காகிதங்கள் செய்து, அதில் "மரங்களை காப்பாற்றுங்கள்" என்று அழகு பார்க்கும்

 ஆச்சர்யமான உண்மை
1872 - இல்  மெக்சிக்கன் விமானமும், ஜெட் விமானமும் நாடு வானில் நேருக்கு நேர் மோதி இழப்புக்குள்ளாகின, அதே மாதிரி மறுபடியும் 1976 -இல் இதே இந்த இரண்டு விமானமும், இதே போல விபத்துக்குள்ளாகின, ஆனால் இது எதனால் என்று 2009 வரை யாருக்கு தெரியவில்லை, 2009 -இல் தான் ISRO-இல் தான் கண்டுபுடிச்சாங்க, எப்படி தெரியுமா, ஒரு தடவை முட்டிட்டு விட்ட கொம்பு முளைசிடுமே அதான் -  ----  சாகடிகிராங்கயா?????????????????? 

ஒரு அப்பா அவருடைய முன்று வயது பையனிடம் கேட்டார் உனக்கு தம்பி பாப்பா புடிக்கும இல்லை தங்கச்சி பாப்பா புடிக்கும? அதுக்கு அவன் சொன்னான் எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பவைதான் புடிக்கும்னு,  -   பயபுள்ளே எப்படி யோசிகிறான் பாருங்க..............

“பெண் பாதுகாகப்பட வேண்டியவள்"

இஸ்லாம் காட்டும்நெறிமுறை-2


இரண்டாவதாக:-


 
பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்
ﭧ ﭨ ﭽ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது.
பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவேபார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, ‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வைஎன்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்என சட்டெனப் பதில் சொன்னார்கள் திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள்.
மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும். பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். சரிதான்,நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது)
இந்த உத்தரவின் மூலம் பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும். 





Thanks

இஸ்லாமிய எழுச்சி

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 20 பேர் பலி





ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

“பெண் பாதுகாகப்பட வேண்டியவள்"

இஸ்லாம் காட்டும்நெறிமுறை-1

பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது.
அவற்றுள்
முதன்மையாக:-
அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்
என
பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது.
ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்
(
அல்குர்ஆன் 33:33)
இந்த உத்திரவின் மூலம், ‘அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்என்று கூறியது.

இன்றைய கல்லூரி மாணவிகள், வயதுக்கு வந்த இள நங்கைகள், ஏன் குடும்பப் பெண்கள்கூட நாகரீக மோகத்தால் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இரவு பலலெனப் பாராது கடை வீதிகளுக்கும். சினிமாத் தியேட்டர்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைகளையும், அதனால் விளையும் விபரீதங்களையும் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம். எனவே தான். ஒரு பெண் பாதுகாகப்பட வேண்டியவள் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்எனக்கூறி சமுதாயத்தின் கண்களான பெண்களை எச்சசரித்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்

வியாழன், 23 டிசம்பர், 2010

இலவச கலர் டிவியை முதல்வருக்கே திருப்பிக் கொடுத்து சாட்டையடி கொடுத்த விவசாயி

நல்லா இருந்தது, அதே சமையும் யோசிக்கிற மாதிரியும் இருந்தது அதான் சுட்டுட்டேன். ஆனால் இதை வழங்கியவருக்கு நன்றி தெரிவித்து இருகிறேன்.

புதன், 22 டிசம்பர், 2010

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு .


Assalamu alaikum,
NEED AIR-CON TECHNICIAN FOR S PASS,DIESEL ENGINE MECHANIC WITH VERY GOOD EXP IN SINGAPORE,
ELECTRICAL DRAFTSMAN/ ELEC DESIGNER & CIVIL ENGINEERS & QS

KINDLY NOTE:THE CANDIDATE SHOULD ATTEND THE PERSONAL INTERVIEW WITH THE EMPLOYER.

Please EMail to consultancy Goal Setterz <goalsetterz@gmail.com> and CC to me.


Goal Setterz Business Solutions Pte Ltd
24, Mid View City Building,
#06-97 Sin Ming Lane, Near Ai Tong School
Singapore-573968

உட்கார்ந்து யோசிச்சது

அரசியல் தத்துவம்:-
என்னதான் "கருணாநிதி" திமுக'ல இருந்தாலும் அவர் சொட்டை  மண்டைல யாராவது கொட்டினா "அம்மான்னு"தான் கத்துவாரு....... 

காதல் கல்யாணத்துக்கும் அரேனஜ்மென் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்? நாமளா கிணத்துல விழுந்தா அது காதல் கல்யாணம்.........., பத்து பேர் தள்ளிவிட்டால் அது அரேனஜ் மென்ட் கல்யாணம் [[ஹோ.. கிளம்பிட்டாய்ங்கப்போ]]

லைப்ல ஒன்னும் இல்லைனா போர் அடிக்கும்,   தலையில ஒன்னும்  இல்லைனா டார் அடிக்கும் [[ஏ யப்பா..... என்னா ஒரு கண்டுபிடிப்பு]]

அக்காவோட பிரெண்ட அக்கான்னு கூப்பிடலாம், தங்கையோட பிரெண்ட தங்கைன்னு கூப்பிடலாம், ஆனால் பொண்டடியோட பிரெண்ட பொண்டடின்னு கூப்பிட முடியாது (எப்படி சிக்கி இருக்கான் பாரு) 

பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க இது கொஞ்சம் ஓவர்தாங்க 

பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா? ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!
GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS:
ஹா..ஹா..ஹா.. நாங்களாம் புக்கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை

என்னடா டிராபிக் இன்ஸ்பெக்டரை கல்யாண் பண்ணினியே First night நல்லா நடந்ததா? அத ஏண்டா கேட்குற Over speed ன்னு R 100, Wrong side Entry ன்னு R.200, Helmet போடத்துக்கு R.500 ன்னு அபராதம் போட்டுட்டடா. ?!?!?
ஃபிப்ரவரி 14 - காதலர்கள் தினம்  ,சரியா 10 மாசம் கழிச்சு நவம்பர் 14 குழந்தைகள் தினம்